கோவையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வீட்டைவிட்டு யாரும் வெளியில் வரவேண்டாம்... மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல்..!

கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கோவையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் வீட்டைவிட்டு யாரும் வெளியில் வரவேண்டாம் என கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கோவையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் வீட்டைவிட்டு யாரும் வெளியில் வரவேண்டாம் என கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கொரோனா நோய்த்தொற்று தற்போது அதிகரித்து வருவதால்‌, முழு ஊரடங்கு அமலில்‌ உள்ள நிலையில்‌, பொதுமக்கள்‌ யாரும்‌ வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. மேலும்‌, மாநகராட்சியில்‌ தற்போது பொதுமக்கள்‌ நலனுக்காக 50 எண்ணிக்கையிலான Mobile Car Ambulance-sert ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு வார்டுகளுக்கு ஒரு Mobile Car Ambulance வீதம்‌ ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, நோய்த்தொற்றால்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌ அந்தந்தப் பகுதி நகர்ப்புற மருத்துவ அலுவலர்கள்‌ தொடர்பு கொண்டு வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டாயம்‌ சொந்த வாகனங்கள்‌ மற்றும்‌ பொது வாகனங்களைத் தவிர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. நோய்த்தொற்றால்‌ பாதிக்கப்பட்ட பொதுமக்கள்‌ மேற்கண்ட Mobile Car Ambulance மூலம்‌ வீடுகளில்‌ இருந்து Triage Centre-களுக்கு அழைத்துவந்து அவர்களுக்கு மருத்துவர்‌ ஆலோசணைப்படி மருத்துவமனைக்கோ அல்லது வீடுகளில்‌ தனித்திருத்தலுக்கோ ஆலோசணைகள்‌ வழங்கும்‌ பட்சத்தில்‌ அவ்விடங்களுக்கு நோயாளிகளைக் கொண்டுவிடவும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மிகவும்‌ அவசரம்‌ எனில்‌ 108 ஆம்புலன்ஸைப் பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...