கோவையில் கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள்‌ கார்‌ ஆம்புலன்ஸ்களை உடனடியாகத் தொடர்கொள்ள அறிவுறுத்தல்..!

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ கொரோனா பெருந்தொற்றுப் பரவல்‌ தற்போது கட்டுப்பாட்டுக்குள்‌ கொண்டு வரப்பட்டு நாள்தோறும்‌ பாதிக்கப்படுவோர்களின்‌ எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனை மேலும்‌ குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ கொரோனா பெருந்தொற்றுப் பரவல்‌ தற்போது கட்டுப்பாட்டுக்குள்‌ கொண்டு வரப்பட்டு நாள்தோறும்‌ பாதிக்கப்படுவோர்களின்‌ எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனை மேலும்‌ குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ கொரோனா பெருந்தொற்றுப் பரவல்‌ தற்போது, நாள்தோறும்‌ பாதிக்கப்படுவோர்களின்‌ எண்ணிக்கை கடந்த நான்கு நாட்களாக குறைந்து வருகிறது. அதனை மேலும்‌ குறைக்க கீழ்கண்ட நடவடிக்கைகளை பொதுமக்கள்‌ பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1) 45 வயதுக்குபட்டவர்கள்‌ கொரோனா நோய்த்தொற்றால்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்களால்‌ வீடுதோறும்‌ சென்று (Home Triage) மருத்துவ பரிசோதனைகள்‌ செய்யப்பட்டு வருகிறது. இதனால்‌ பாதிக்கபபட்டவர்கள்‌ வெளியே வராமல்‌ தங்களது வீட்டிலேயே மருத்துவம்‌ பார்த்து கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள்‌.

2) 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்‌ பாதிக்கப்படும்‌ பட்சத்தில்‌ மாநகராட்சியால்‌ செயல்படுத்தபபட்டு வரும்‌ மருத்துவ பரிசோதனை மையங்களை (Triage Centre) பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. இதற்காக கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மூலம்‌ 5 மண்டலங்களுக்கு தலா 10 கார் ஆம்புலன்ஸ்‌ (TOYOTA INNOVA) ஒதுக்கீடு செய்யப்பட்டு, கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை மாநகராட்சி மூலம்‌ உடனடியாக அலைபேசி மூலம்‌ தொடர்பு கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக கார்‌ ஆம்புலன்ஸ்‌ மூலம்‌ அழைத்து செல்லப்பட்டு வருகிறார்கள்‌.

மேலும்‌, கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள்‌ மேற்படி, கார்‌ ஆம்புலன்ஸ்களை உடனடியாகத் தொடாபுகொள்ள வேண்டியிருப்பின்‌ 97505 54321 மற்றும்‌ 0422-2302323 என்ற தொலைபேசி எண்களைப் பயன்படுத்திக்‌ கொள்ளுமாறும்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள்‌ எவரும்‌ பொது மக்கள்‌ பயணிக்கக்கூடிய வாகனங்களிலோ அல்லது இரு சக்கர வாகனங்களிலோ செல்லக்கூடாது என கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...