குழந்தை திருமணம் நடத்தினால் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை - கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

கோவை: கோவை மாவட்டத்தில் குழந்தைத் திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் அதற்கு ஆதரவாக செயல்பட கூடியவர்கள் யாராக இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் நாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் குழந்தைத் திருமணத்தை நடத்தி வைப்பவர்கள் அதற்கு ஆதரவாக செயல்பட கூடியவர்கள் யாராக இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் நாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குழந்தை திருமணம் நடத்தி வைப்பவர்கள், அதை ஊக்குவிப்பவர்களுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். நாட்டில் பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும், திருமணத்துக்கான சட்டபூர்வ வயதாக உள்ளது. இந்த வயதுக்கு கீழே இருப்பவர்களுக்கு நடக்கும் திருமணம், சட்டத்தை மீறிய செயலாக கருதப்படும். இத்தகைய திருமணம் நடத்துபவர்களுக்கு, சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

ஆகவே, குழந்தை திருமணத்தை நடத்துபவர், நடத்த ஊக்குவிப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை, நீட்டிக்கக் கூடிய கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும். ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். குழந்தை திருமணங்களை தடுப்பதற்கான தகவல்களை, பொதுமக்கள் அரசுக்கு தெரிவிக்க வசதியாக, 1098 என்ற இலவச போன் எண் உள்ளது.

மாவட்ட சமூக நல அலுவலரை, 90252 93938 என்ற எண்ணிலும், மகளிர் உதவி மையத்தை, 181 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...