கோவை மாவட்டத்தில் 07.06.2021 முதல்‌ 14.06.2021 காலை 6.00 மணி வரை நீட்டிப்பு செய்துள்ள ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்... கோவை மாநகராட்சி விளக்கம்..!

கோவை: தமிழ்நாடு அரசு வருவாய்‌ மற்றும்‌ பேரிடர் மேலாண்மைத்துறை அரசாணை எண்‌.394 நாள்‌.05.06.2021-ன்படி, தமிழகத்தில்‌ ஊரடங்கு 07.06.2021 முதல்‌ 14.06.2021 காலை 6.00 மணி வரை சில தளர்வுகளுடன்‌ நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழ்நாடு அரசு வருவாய்‌ மற்றும்‌ பேரிடர் மேலாண்மைத்துறை அரசாணை எண்‌.394 நாள்‌.05.06.2021-ன்படி, தமிழகத்தில்‌ ஊரடங்கு 07.06.2021 முதல்‌ 14.06.2021 காலை 6.00 மணி வரை சில தளர்வுகளுடன்‌ நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வருவாய்‌ மற்றும்‌ பேரிடர் மேலாண்மைத்துறை அரசாணையின்‌ அடிப்படையில்‌, கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌, கீழக்கண்ட அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும்‌ கட்டுப்பாடுகளுடன்‌ 07.06.2021 முதல்‌ அனுமதி அளிக்கப்படுகிறது.

தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள்‌, காய்கறிகள்‌, இறைச்சி மற்றும்‌ மீன்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

காய்கறி, பழம்‌ மற்றும்‌ பூ விற்பனை செய்யும்‌ நடைபாதைக்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மீன்‌ சந்தைகள்‌ மொத்த விற்பனைக்காக மட்டும்‌ செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

இறைச்சிக்‌ கூடங்கள்‌ (Slaughter Houses) மொத்த விற்பனைக்கு மட்டும்‌ அனுமதிக்கப்படுகிறது.

மாநகராட்சி மூலம்‌ அனுமதி வழங்கப்பட்டுள்ள மொத்த கொள்முதல்‌ மளிகை மற்றும்‌ பலசரக்கு கடைகள்‌ இரவு 10.00 மணி முதல்‌ காலை 5.00 மணி வரை சில்லறை வியாபாரிகளுக்கு மட்டும்‌ விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

எம்‌.ஜி.ஆர்‌. மொத்த காய்கறி மார்க்கெட்‌, ராமர்‌ கோவில்‌ வீதி மார்க்கெட்‌, தியாகி குமரன்‌ மார்க்கெட்‌, அண்ணா காய்கறி மார்க்கெட்‌, சீனிவாசபுரம்‌ மார்க்கெட்‌ மற்றும்‌ துடியலார்‌ காய்கறி மார்க்கெட்டுகள்‌ காலை 3.00 மணி முதல்‌ காலை 7.00 மணி வரை மட்டும்‌ சில்லறை காய்கறி வியாபாரிகளுக்கு மட்டும்‌ விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

வியாபாரத்தின்போது உரிய பாதுகாப்பு நெறிமுறைகளான முகக்கவசம்‌ அணிதல்‌, போதிய சமூக இடைவெளி பின்பற்றுதல்‌, மேலும்‌ அடிக்கடி கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம்‌ செய்வது போன்ற நடைமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்றவும்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...