தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21ம் தேதி வரை நீடிப்பு என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை மேலும் ஒரு வாரகாலம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை மேலும் ஒரு வாரகாலம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; 

“கொரோனா பெருந்தொற்று பரவலைக்‌ கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு தமிழ்நாட்டில்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும்‌ 14-06-2021 அன்று காலை 6 மணிக்கு முடிகிறது. 

இந்த நிலையில்‌, நோய்த்‌ தொற்றின்‌ தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும்‌, நோய்த்‌ தொற்று பரவாமல்‌ தடுத்து, மக்களின்‌ விலைமதிப்பறற உயிர்களைக்‌ காக்கும்‌ நோக்கத்திலும்‌, இந்த முழு ஊரடங்கு 14-06-2021 முதல்‌ 21-06-2021 காலை 06-00 மணி வரை, மேலும்‌ ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்படுகிறது. 

இந்த ஊரடங்கின்‌ போது கடைகள்‌ உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் மற்றும்‌ பொது மக்கள்‌ முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். 

கடைகளின்‌ நுழைவு வாயிலில்‌, வாடிக்கையாளர்‌ பயன்படுத்தும்‌ வகையில்‌ கை சுத்திகரிப்பான்‌௧ள்‌ கட்டாயமாக வைக்கப்பட வேண்டும். உடல்‌ வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு வாடிக்கையாளர்களை பரிசோதனை செய்ய வேண்டும்‌. 

கடைகளில பணிபுரிபவர்களும்‌, வாடிக்கையாளர்களும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிவதை நிர்வாகம்‌ உறுதி செய்ய வேண்டும்‌.

அனைத்து கடைகளும்‌, குளிர்‌ சாதன வசதி இல்லாமல்‌ செயல்படுவதோடு, கடைகளில்‌ சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்‌ வகையில்‌ ஒரே நேரத்தில்‌ அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

கடைகளின்‌ நுழைவு வாயிலில்‌ பொது மக்கள்‌ நிற்பதற்காக இடைவெளி இருக்கும்‌ வகையில்‌ குறியீடுகள்‌ போடப்பட வேண்டும்‌. 

இந்த ஊரடங்கின்‌ போது, அனைத்து மாவட்டங்களிலும்‌ ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள்‌ தொடர்ந்து அனுமதிக்கப்படும்‌.

நோய்த்‌ தொற்றுப்‌ பரவல்‌ கட்டுக்குள்‌ வந்திருந்தாலும்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில்‌ நோய்த்‌ தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில்‌ உள்ளவர்களின்‌ எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. 

எனவே, பொதுமக்களின்‌ அத்தியாவசியத்‌ தேவைகளை பூர்த்தி செய்யும்‌ நோக்கத்துடனும்‌ தற்போது ஏறகனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன்‌, இந்த 11 மாவட்டங்களில்‌ கூடுதலாக கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும்‌ கட்டுப்பாடுகளுடன்‌ 14ம் தேதி முதல்‌ அனுமதி அளிக்கப்படுகிறது.

தனியார்‌ பாதுகாப்பு சேவை நிறுவனங்கள்‌ மற்றும்‌ அலுவலகம்‌, வீடுகள்‌ மற்றும்‌ அடுக்குமாடி குடியிருப்புகளில்‌ வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள்‌ (Housekeeping) இ- பதிவுடன்‌ அனுமதிக்கப்படும்‌.

மின்‌ பணியாளர்‌ (Electricians), Weriuraser (Plumbers), கணினி மற்றும்‌ இயந்திரங்கள்‌ பழுது நீக்குபவர்‌ மற்றும்‌ தச்சர்‌ போன்ற சுயதொழில்‌ செய்பவர்கள்‌ சேவை கோருபவர்‌ வீடுகளுக்குச்‌ சென்று பழுது நீக்கம்‌ செய்ய காலை 9,00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை இ- பதிவுடன்‌ அனுமதிக்கப்படுவர்‌, எனினும்‌ இவ்வகைக்‌ கடைகள்‌ திறக்க அனுமதியில்லை.

மிதிவண்டி மற்றும்‌ இருசக்கர வாகனங்கள்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ (விற்பனை கடைகள்‌ அல்ல) காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

வாடகை வாகனங்கள்‌, டேக்ஸிகள்‌ மற்றும்‌ ஆட்டோக்களில்‌ பயணிகள்‌ இ- பதிவுடன்‌ செல்ல அனுமதிக்கப்படும்‌. மேலும்‌, வாடகை டேக்ஸிகளில்‌, ஒட்டுநர்‌ தவிர மூன்று பயணிகளும்‌, ஆட்டோக்களில்‌, ஒட்டுநர்‌ தவிர இரண்டு பயணிகள்‌ மட்டும்‌ பயணிக்க அனுமதிக்கப்படும்‌.

வேளாண்‌ உபகரணங்கள்‌, (பம்பு செட்‌) பழுது நீக்கும்‌ கடைகள்‌ (விற்பனை கடைகள்‌ அல்ல) காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌. கண்கண்ணாடி விற்பனை மற்றும்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மண்பாண்டம்‌ மற்றும்‌ கைவினைப்‌ பொருட்கள்‌ தயாரித்தல்‌ மற்றும்‌ விற்பனை காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

ஏற்றுமதி நிறுவனங்கள்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரித்து வழங்கும்‌ நிறுவனங்கள்‌ 25 சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத்‌ தவிர, இதர 27 மாவட்டங்களில்‌ நோய்த்‌ தொற்று குறைந்து வருவதைக்‌ கருத்தில்‌ கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன்‌ கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும்‌ அனுமதிக்கப்படும்‌.

அழகு நிலையங்கள்‌, சலூன்கள்‌, குளிர்‌ சாதன வசதி இல்லாமலும்‌, ஒரு நேரத்தில்‌ 50 சதவிகித வாடிக்கையாளர்கள்‌ மட்டும்‌ அனுமதிக்க வேண்டும்‌ என்ற நிபந்தனையுடன்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

அரசு பூங்காக்கள்‌ மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகளின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள பூங்காக்கள்‌, விளையாட்டு திடல்களில்‌ காலை 6.00 மணி முதல்‌ காலை 9.00 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌.

வேளாண்‌ உபகரணங்கள்‌, பம்பு செட்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ (விற்பனை கடைகள்‌ அல்ல) காலை 9.00 மணி முதல மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

கண்கண்ணாடி விற்பனை மற்றும்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மண்பாண்டம்‌ மற்றும்‌ கைவினைப்‌ பொருட்கள்‌ தயாரித்தல்‌ மற்றும்‌ விற்பனை காலை 6.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மிக்சி, கிரைண்டர்‌, தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின்‌ பொருட்களின்‌ பழுதுநீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

டாஸ்மாக்‌ கடைகள்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

செல்பேசி மற்றும்‌ அதனைச்‌ சார்ந்த பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

கட்டுமானப்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

மிக்ஸி, கிரைண்டர்‌, டி.வி. பிரிட்ஜ்‌ உள்ளிட்ட வீட்டு உபயோகப்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.

பள்ளி, கல்லூரிகள்‌ மற்றும்‌ பலகலைக்கழகங்களில்‌ மாணவர்‌ சேர்க்கை தொடர்பான நிர்வாகப்‌ பணிகள்‌ மேற்கொள்ள அனுமதிக்கப்படும்‌.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரித்து வழங்கும்‌ நிறுவனங்கள்‌ 50 சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்‌.

தற்போது இதர தொழிற்சாலைகளும்‌ 33 சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌.

தொழிற்சாலைகளில்‌ பணிபுரியும்‌ தொழிலாளர்கள்‌ நான்கு சக்கர வாகனங்களில்‌ பணிக்கு செல்ல ஏற்கனவே அனுமதிக்கப்பட்டி ருந்தனர்‌. தற்போது அவர்கள்‌ தங்களது இரு சக்கர வாகனங்களிலும்‌ இ- பதிவு மற்றும்‌ தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அடடையுடன்‌ பணிக்கு சென்று வர அனுமதிக்கப்படுவர்‌.

தகவல்‌ தொழில்நுட்பம்‌ / தகவல்‌ தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில்‌ 20 சதவிகிதம்‌ பணியாளர்கள்‌ அல்லது 10 நபர்கள்‌ மட்டும்‌ பணிபுரிய அனுமதிக்கப்படுவர்‌.

வீட்டு வசதி கடன் நிறுவனம்‌, வங்கி சாரா நிதி நிறுவனங்கள்‌ (NBFCS) மற்றும்‌ அனைத்து காப்பீட்டு நிறுவனங்கள்‌ 33 சதவிகித பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

கொரோனா நோய்த்‌ தொற்றைக்‌ கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில்‌ முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்‌, பொது மக்கள்‌ அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில்‌ வருவதையும்‌, கூட்டம்‌ கூடுவதையும்‌ தவிர்க்க வேண்டும்‌. 

மேலும்‌, கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில்‌ குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில்‌ முகக்‌ கவசம்‌ அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

கைகளை அடிக்கடி சோப்பு போட்டோ அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம்‌ செய்வது ஆகியவற்றை கட்டாயம்‌ பின்பற்றவும்‌, நோய்த்தொற்று அறிகுறிகள்‌ தென்பட்டவுடன்‌, பொதுமக்கள்‌ உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

மக்கள்‌ அனைவரும்‌ அரசின்‌ முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும்‌ அகற்ற உதவிட வேண்டும்.”

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...