கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை 40 சதவிகித கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். கலெக்டர் சமீரன் உத்தரவு

கோவை: கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை 40 சதவிகித கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என கலெக்டர் சமீரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


கோவை: கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை 40 சதவிகித கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என கலெக்டர் சமீரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவையிலுள்ள தனியார் பள்ளிகள் 2020 - 21 ஆம் ஆண்டுக்கான கல்விக்கட்டணம் ஆகஸ்ட் 31 வரை 40 சதவிகிதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என தனது உத்தரவில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை.

இந்தநிலையில், 2021- 2022 கல்வியாண்டில், கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் சுயநிதிப் பள்ளிகளில் கட்டணங்கள் அதிகமாக வசூலிப்பதாகவும் மாணவா்களின் பெற்றோரை அதிகக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத் துவதாகவும் புகார்கள் வருகின்றன.

இது தொடா்பாக 2020 -2021 ஆம் கல்வியாண்டில் கல்விக் கட்டணம் ஆகஸ்ட் 31 முடிய 40 சதவிகிதமும், அதனைத் தொடா்ந்து இரண்டாம் கட்டமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி 29 முடிய 35 சதவிகிதம் என 75 சதவிகிதம் கல்விக் கட்டணம் மட்டும் வசூலித்துக் கொள்ள நீதிமன்றத்தால் இடைக்கால தீா்ப்பாணைகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைக் கடிதத்தில் 2021 - 2022 ஆம் கல்வி ஆண்டுக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31 முடிய 40 சதவிகிதம் கல்விக் கட்டணம் மட்டும் வசூலித்துக் கொள்ளவும், பின் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து 2 மாதங்களுக்குள் 35 சதவிகிதம் வசூலித்துக் கொள்ளவும், மீதமுள்ள 25 சதவிகிதம் கல்விக் கட்டணம் குறித்து அப்போது உள்ள சூழ்நிலையைப் பொருத்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து சுயநிதிப் பள்ளிகளும் 2021 – 2022 கல்வியாண்டில் ஆகஸ்ட் 31 முடிய 40 சதவிகிதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தை தவிர்த்து, காலணிகள், சீருடைகள், வாகனங்கள் போன்ற இதர கட்டணங்கள் ஏதும் வசூலித்தல் கூடாது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...