கோவையில் நாளை முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள்: ஆட்சியர் அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது உள்பட புதிய கட்டுப்படுகள் அமல்படுத்தப்படுவதாக ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை முதல் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது உள்பட புதிய கட்டுப்படுகள் அமல்படுத்தப்படுவதாக ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வணிகர் சங்கப் பிரதிநிதிகளுடான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில், அவர் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில கட்டுப்பாடுகளுடன் செவ்வாய்க்கிழமை (ஆக்ஸ்ட் 3) முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் மாவட்டம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பேக்கரிகள், டீ கடைகள் காலை 6 முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மீன், இறைச்சிக் கடைகள் காலை 6 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சுற்றுலாத்தளங்கள், அருங்காட்சியகங்களில் பொது மக்கள் பார்வைக்கு தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து பூங்காக்களும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள மால்கள், பன்னாட்டு வணிக வளாகங்கள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. மேலும், மால்களில் உள்ள

உணவகங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகள் பொருந்தும்.

தவிர, பொள்ளாச்சி மாட்டுச் சந்தை புதன்கிழமை (ஆகஸ்ட் 4) முதல் இயங்க தடைவிதிக்கப்படுகிறது. கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், வணிகர் சங்க பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...