கோவை மாநகராட்சியில் 15 -ஆம் தேதி வரை வரிவசூல் நிறுத்தம்.!! புதிய மென்பொருள் ஒருங்கிணைப்பு பணி நடைபெறுவதால் மாநகராட்சி ஆணையர் தகவல்!!

கோவை: கோவை மாநகராட்சியில் 15 -ஆம் தேதி வரை வரிவசூல் நிறுத்தம் செய்யப்பட்டு, புதிய மென்பொருள் ஒருங்கிணைப்பு பணி நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் சுங்கார தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சியில் 15 -ஆம் தேதி வரை வரிவசூல் நிறுத்தம் செய்யப்பட்டு, புதிய மென்பொருள் ஒருங்கிணைப்பு பணி நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் சுங்கார தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி உட்பட்ட அனைத்து வரி வசூல் செய்யும் மையங்களில் புதிய மென்பொருள்கள் ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து வருகிற 15-ஆம் தேதி வரை வரி வசூல் மையம் நிறுத்தப்படுவதாகக் கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருக்கிறார்.

கோவை மாநகராட்சியில் புதிய மென்பொருள் ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை வரி வசூல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, அனைத்து மாநகராட்சியிலும் பயன்பாட்டில் உள்ள யூ.டி.ஐ.எஸ் என்னும் ஒருங்கிணைந்த மென்பொருள் தற்போது கோவை மாநகராட்சியில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

எனவே, யூ.டி.ஐ.எஸ். மென்பொருள் ஒருங்கிணைக்கும் பணிகள் காரணமாக அனைத்து விதமான வரிவசூல் பணிகள், புதிய சொத்துவரி விதிப்பு, புதிய குடிநீர் இணைப்பு, வணிக உரிமம் தொடர்பான சேவைகள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை செயல்படாது.

மேலும், சொத்துவரி மற்றும் குடிநீா்க் கட்டணம் செலுத்தும் இணையதள வசதிகள் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை செயல்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...