கோவை‌ மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள சாலையோர வியாபாரிகள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.!!

கோவை‌: கோவை‌ மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள சாலையோர வியாபாரிகளின்‌ தொழில்‌ மேம்பாட்டிற்காக வங்கிக்கடன்‌ வழங்கும்‌ திட்டம்‌ ஒன்றிய அரசால்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.


கோவை‌: கோவை‌ மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள சாலையோர வியாபாரிகளின்‌ தொழில்‌ மேம்பாட்டிற்காக வங்கிக்கடன்‌ வழங்கும்‌ திட்டம்‌ ஒன்றிய அரசால்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சி பகுதிகளில்‌ தினசரி மார்க்கெட்‌ வாரச்சந்தை, பூங்கா, இரயில்‌ நிலையம்‌, பேருந்து நிலையம்‌, கோவில்‌ சுற்றுப்பகுதி மற்றும்‌ கடை வீதி பகுதிகளில்‌ வியாபாரம்‌ செய்யும்‌ சாலையோர வியாபாரிகளுக்கென பிரத்தியேகமாக இத்திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில்‌, முதற்கட்டமாக வங்கிகள்‌ மூலம்‌ மாதத்தவணை ரூ.946/- வீதம்‌ 12 மாதங்களுக்குத் திரும்பிச்செலுத்த வேண்டும்‌ என்ற நிபந்தனையுடன்‌, ரூ.10,000/- கடனுதவி வழங்கப்படுகின்றது.

இத்திட்டத்தின்‌ மூலம்‌ நாள்தோறும் 7910 சாலையோர வியாபாரிகள்‌ பயன்பெற்றுள்ளனர்‌. தகுதியுள்ள நபர்கள்‌ தங்களது ஆதார்‌ அட்டை நகல்‌, வங்கிக் கணக்கு புத்தகம்‌ போன்ற ஆவணங்களுடன்‌ மாநகராட்சி பிரதான அலுவலகம்‌ மற்றும்‌ மாநகராட்சி மண்டல அலுவலகங்களில்‌ இதற்கென அமைக்கப்பட்டுள்ள முகாம்களில்‌ வார நாட்களில்‌ கீழ்க்கண்ட அலைபேசி எண்ணில்‌ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஒருங்கிணைப்பாளர்‌: திரு.பாலசுந்தரம்‌ - 99449-48878

ஏற்கனவே, ரூ.10,000/- கடன்‌ பெற்று முறையாகத் திரும்பச் செலுத்தி முடித்தவர்களுக்கு ரூ.20,000/- கடனுதவி வங்கிகள்‌ மூலம்‌ வழங்க ஏற்பாடு செய்யப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்௧கரா இ.ஆ.ப.,‌ தெரிவித்துள்ளார்கள்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...