கோவை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

கோவை: கோவை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட பட்டாசு விற்பனை வியாபாரிகள்‌ நலச்சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் மாதம் 04ம் தேதியன்று கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகர காவல்‌ நிலையங்களின்‌ எல்லைகளுக்கு உட்பட்ட (பி1 முதல்‌ பி4, சி1 முதல்‌ சி4, இ1 முதல்‌ இ3 மற்றும்‌ டி1 முதல்‌ டி4 வரையிலான காவல்‌ நிலைய எல்லைகள்‌); பகுதிகளில்‌ தற்காலிக பட்டாசு உரிமம்‌ பெற விண்ணப்பங்கள்‌ 22.07.2021 முதல்‌ மாநகர காவல்‌ அலுவலகத்தில்‌ பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள்‌ 21.08.2021 அன்று மாலை 6 மணி ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது கோவை மாவட்ட பட்டாசு விற்பனை வியாபாரிகள்‌ நலச்சங்கம்‌ அளித்த 16.08.2021 நாளிட்ட மனுவில்‌, கோவை மாநகராட்சியில்‌ மென்பொருள்‌ மேம்படுத்தல்‌ நடைபெறுவதால்‌ மாநகராட்சியில்‌ செலுத்தவேண்டிய கட்டணங்கள்‌ (சொத்துவரி, குப்பைவரி மற்றும்‌ வர்த்தகர்கள்‌ கட்டணம்) செலுத்த இயலவில்லை எனவும்‌ விண்ணப்பிக்க கால அவகாசம்‌ நீட்டிக்குமாறும்‌ கோரியதன்‌ பேரில்‌, விண்ணப்பிக்க கால அவகாசம்‌ 31.08.2021 மாலை 6 மணி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.

எனவே, வரும் 31.08.2021 அன்று மாலை 06.00 மணிக்குள்‌ முழுமையான வடிவத்தில்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ மட்டும்‌ பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட இடங்களைப்‌ பார்வையிட்டு, விசாரணைக்குப்பின்‌ காவல்துறை கண்ணோக்கில்‌ திருப்தியடையும்‌ பட்சத்தில்‌ மட்டுமே உரிமம்‌ வழங்கப்படும்‌.

அதேபோல, மேற்கண்ட தேதிக்கு மேல்‌ விண்ணப்பம்‌ சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு செய்யப்படமாட்டாது. குறித்த காலக்கெடுவுக்குள்‌ முழுமையாகப்‌ பெறப்படாத விண்ணப்பங்கள்‌ எவ்வித முன்னறிவிப்புமின்றி தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...