கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஆகிய மாவட்டங்களில் வருகிற 27 மற்றும் 28 -ம் தேதிகளில் கனமழை பெய்யு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கோவை: கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஆகிய மாவட்டங்களில் வருகிற 27 மற்றும் 28 -ம் தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை நீலகிரி தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு, குறிப்பாக 27, 28 -ம் தேதி இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் வரும் 27, 28 -ம் தேதிகளில் கனமழை பெய்யும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழையும், சென்னையில் இன்று சில இடங்களில் மிதமான மழையும்,திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும், எனவே இந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...