கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் லாட்ஜுகளுக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் எச்சரிக்கை.!! மீறினால் சீல் வைக்கப்படும்.!!

கோவை: கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் லாட்ஜுகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் லாட்ஜுகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் விடுதிகள் மற்றும் லாட்ஜுகள் நட்சத்திர ஓட்டல்கள் இவைகள் அனைத்தும் அரசு கூறியுள்ள வழிகாட்டு நெறி முறைகளைக் கையாளவேண்டும் நெறிமுறைகளை மீறக்கூடிய நிறுவனங்களுக்குச் சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவையில் வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது. இதில் பயிலும் பல்வேறு மாநில மாவட்ட மாணவ மாணவிகள் தாங்கள் பயிலும் கல்லூரி ஹாஸ்டல் தங்கி வருகின்றனர்.

பெரும்பாலானோர் தனியார் தங்கும் விடுதிகளில் அறை எடுத்துத் தங்கி வருகின்றனர். இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் தனியார் தங்கும் விடுதிகளில் வைரஸ் தடுப்பு நடவடிக்கை பின்பற்றுவதில்லை என்று பொதுமக்கள் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் தனியார் விடுதிகளில் தங்குபவர்கள் இரண்டு முறை தடுப்பூசி எடுத்துக் கொண்டனரா ? தனி நபர் இடைவெளி பின்பற்றப்படுகிறதா ? என்பது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் சீரபாளையம் ஈச்சனாரி பகுதியிலுள்ள 7 தனியார் விடுதிகள் அமைந்துள்ள பகுதியை மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி ஆய்வு செய்தார் .

அப்போது கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் தங்கவைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதில் இரண்டு விடுதிகளில் 2 தடுப்பூசிகள் எடுத்துக் கொள்ளாமல் மாணவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதிக அளவில் மாணவ மாணவிகள் ஒரே விடுதியில் தங்க அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் 2 தடுப்பூசி போடாதவர்களை உடனடியாக காலி செய்யவும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் விடுதிகள் சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...