விநாயகர் சதுர்த்தி விழா: கோவை மாவட்டத்தில் 1500 போலீசார் குவிப்பு; தடையை மீறி சிலை வைத்தால் அப்புறப்படுத்தப்படும் என்று எச்சரிக்கை

கோவை: தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் 3-ம் அச்சம் காரணமாக, மத்திய அரசு அந்தந்த மாநிலங்களுக்கு அங்கு உள்ள கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு, தளர்வுகள் அறிவிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது


கோவை: தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் 3-ம் அச்சம் காரணமாக, மத்திய அரசு அந்தந்த மாநிலங்களுக்கு அங்கு உள்ள கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு, தளர்வுகள் அறிவிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்திற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், இந்து அமைப்புகள் தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படும், ஊர்வலங்கள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.

நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் 1,500 போலீசார் இன்று இரவிலிருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்கியுள்ளன. பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது என்றும் வீடுகள் மற்றும் கோயில்களில் மட்டும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு, அவைகளை 45 நீர்நிலைகளில் கரைப்பதற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

தடையை மீறி பொது இடங்களில் வைக்கப்படும் சிலைகளை அகற்ற 15 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.சிலைகளை அப்புறப்படுத்த 45 -க்கும் மேற்பட்ட லாரிகள் தயார் நிலையில் உள்ளன என்றும் ஒவ்வொரு குழுவிற்கும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் இரண்டு காவலர்கள், இரண்டு மாநகராட்சி ஊழியர், வருவாய்த் துறை ஊழியர் ஒருவர் இடம்பெறுவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது

அவ்வாறு அப்புறப்படுத்தப்படும் விநாயகர் சிலைகள், இந்து சமய அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்படும் என்றும் பின்னர் அனைத்தையும் ஒன்றாக கொண்டு சென்று அரசே நீர்நிலைகளில் கரைத்து விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் இயங்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, இந்துக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தடை விதிப்பது கண்டனத்துக்குரியது என்று இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வரும் சூழலில், நாளை தடையை மீறி சிலை வைப்பார்களா? இல்லை பொதுமக்களின் பாதுகாப்பை கருதி அரசு விதியுள்ள தடையை மதிப்பார்களா? என்பது நாளைய தினம் தான் தெரியவரும்.

இந்த சூழலில், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் 1500 போலீசார் இன்று இரவு முதல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...