கோவை கிணத்துக்கடவு பகுதியில் நாளை 94 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்..!

கோவை: கோவை கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் நாளை 94 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் நாளை 94 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கிணத்துக்கடவு தாலுகாவிற்கு உட்பட்ட 34 கிராம பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சி பகுதியில் 94 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அந்தந்த பகுதியிலுள்ள அரசுப்பள்ளி, சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையங்கள் திரையரங்குகள், பேருந்து நிலையம் மற்றும் அரசுப் பள்ளி இல்லாத கிராமத்தில் கோவில்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படுகிறது.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வருவாய்த்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...