கோவையில் கூடுதல் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள்: ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்தும் மூடல் - ஆட்சியர் சமீரன் உத்தரவு

தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோவை மாவட்டத்தில் கூடுதலாக கட்டுப்பாடுகள் 1.9.20201 முதல் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோவை மாவட்டத்தில் கூடுதலாக கட்டுப்பாடுகள் 1.9.20201 முதல் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் 17.9.20201 முதல் கீழ்க்கண்ட தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.

அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகள் மருந்தகம், காய்கறி கடைகள், மளிகை கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட், தவிர மற்ற கடைகள்/ சந்தைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்கள், பேக்கரிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அடுக்கு மாடி வணிக வளாகங்கள், திரை அரங்குகள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்கள் மட்டும் அனுமதி, மற்றும் 50 சதவீத கடைகள் சுழற்சிமுறையில் அனுமதிக்கப்படுகிறது. மேலும், உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவீத கடைகள் உடனே இயங்க அனுமதிக்கப் படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வாரச் சந்தைகளில் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகள் தொடரும் எனவும் பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்க அனுமதிக்கப் படுகிறது.

மேற்படி, சந்தைகளில் வெளிமாவட்ட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளாமல் இருப்பதை சார் ஆட்சியர், நகராட்சி ஆணையர் பொள்ளாச்சி, இதனை உறுதி செய்ய வேண்டும்.

20.9.2021 முதல் அனைத்து வணிக வளாகங்கள், துணிக் கடைகள், நகைக் கடைகள், மற்றும் இதர கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள், தடுப்பூசி முதல் தவணையாகச் செலுத்தியிருக்க வேண்டும், மேலும், வாடிக்கையாளர்கள் தடுப்பூசி முதல் தவணை செலுத்தி இருப்பதை கண்காணிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கடை உரிமையாளர் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அனைத்து பொதுமக்களின் கடமையாகும். மக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து தடுப்பு நிலையான இயக்க நடைமுறைகளைப் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருக்கிறார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...