சமூக நீதிப்போராளியா? மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக நீங்கள் செய்த சாதனைகள் என்ன? அரசின் ரூ.1 லட்சம் பரிசுத்தொகை பெறுவதற்கு அரிய வாய்ப்பு!

சமூக நீதிக்காகப்பாடுபட்டவர்களை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும்” சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதோடு ரூ. 1லட்சம் பரிசுத்தொகையும் அரசின் மூலம் வழங்கப்படும். இந்தாண்டு இதற்கு தகுதியள்ளவர்கள் விண்ணப்பங்களை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு.


கோவை: தமிழகத்தில் சமூக நீதிக்குப் பாடுபட்டவர்களை கௌரப்படுத்தும் விதமாக “சமூக நீதிக்கான தந்தைப்பெரியார் விருது" கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுவருகிறது.

தமிழக முதலமைச்சரால் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூபாய் 1 லட்சம் மற்றும் ஒரு பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுவது வழக்கம். அதன் இந்த 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

எனவே சமூக நீதிக்காகப் பாடுபட்டு, பொது மக்களின்‌ வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்டப் பணிகள்‌ மற்றும்‌ அதன்‌ பொருட்டு ஏற்பட்ட சாதனைக‌ள் குறித்த விபரம் மற்றும் அதன் ஆவணங்கள், அதோடு தங்களின் சுய விபரம், முழு முகவரி, தொலைப்பேசி எண் ஆகியவற்றைக்குறிப்பிட்டு உங்களுடைய விண்ணப்பங்களை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். மேலும் இதுக்குறித்த கூடுதல் விவரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலக தொலைபேசி எண் - 0422 230040 என்ற எண்ணிற்கு தொடர்புக்கொண்டு அறிந்துக்கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...