காந்தி ஜெயந்தி விழாவிற்கான பேச்சுப்போட்டி; திறமையுள்ள மாணவர்கள் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ள கோவை மாவட்ட நிர்வாகம்!

கோவையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறவிருக்கும் பேச்சுப்போட்டியில் கலந்துக்கொள்வதற்கு மாணவர்களுக்கு அழைப்பு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


கோவை: தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான மானியக்கோரிக்கையில், நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்கள் காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணாதுரை, கலைஞர் ஆகியோரின் பிறந்தநாளன்று, மாவட்ட அளவில் பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கோவை தமிழ் வளர்ச்சித்துறைச் சார்பில் அக்டோபர் 2-ம் தேதி,அரசு கலை கல்லுாரியில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தனித்தனியாக, பேச்சு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களில், அரசு பள்ளியைச் சேர்ந்த இருவரை தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் 2,000 ரூபாய் சிறப்பு பரிசுத்தொகையாக வழங்கப்படும்.கோவை அரசு கலை கல்லுாரியில், அக்., 2ம் தேதி காலை, 10 மணிக்கு துவங்கும் பேச்சுப்போட்டியில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்க, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்துக் கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என ஆட்சியர் வேண்டு கோள் விடுத்துள்ளார். இதில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, 5000, 3000, 2000 ரூபாய் என்ற அடிப்படையில் பள்ளி, கல்லுாரி பிரிவுகளில் தனித்தனியாக பரிசுத்தொகை வழங்கப்படும்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...