கந்துவட்டி, மீட்டர் வட்டி வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தா மோர் எச்சரிக்கை!

கோவை மாநகரில் மக்களிடம் கந்துவட்டி, மீட்டர் வட்டி வசூலிப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தா மோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: குடும்பத்தின் சில அவசரத்தேவைகளுக்காக மக்கள் பலர் கந்துவட்டி மற்றும் மீட்டர் வட்டிக்கு பணம் பெற்றுவந்தனர்.

ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச்சமாளிப்பதற்கும், சிறு, குறு தொழில் நிறுவனங்களை சீரமைக்கப்பதற்கு பலர் கந்துவட்டிக்கு பணம் பெற்றுவருகின்றனர். சில இடங்களில் கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களின் வீடுகள் மற்றும தொழில்நிறுவனங்களுக்கு சென்று நேரடியாக வட்டிப்பணத்தை வசூலித்துவருகின்றனர்.

சில நேரங்களில் பணத்தைக்கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டால், தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு , சில நேரங்களில் அத்துமீறியும் நடந்துக்கொள்கின்றனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தான் பலர் விபரீதமான முடிவுகளை வாழ்க்கையில் எடுக்கின்றனர். குறிப்பாக கந்துவட்டி, மீட்டர் வட்டிக்கு பணம் கொடுப்பது என்பது சட்டப்படி தண்டனைக்குரிய செயலாகும். இதுக்குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் தாமாக முன்வந்து புகார் தெரிவிக்க வருவதில்லை என்ற குற்றச்சாட்டை காவல்துறையினர் முன்வைக்கின்றனர்.

எனவே காவல்நிலையத்திற்கு வந்து நேரடியாக புகார் கொடுக்க அச்சம் கொண்ட பொதுமக்கள், கோவை மாநகர காவல்துறையினர் செல்போன் நம்பர் 94981812 13 என்ற தொலைபேசி மூலமாகவும் 8190000100 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம் என மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் அளிக்கும் புகாரையடுத்து கந்துவட்டி, மீட்டர் வட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...