கோவையில் ஊர்காவல் படையில் பணி புரிய ஆர்வமுள்ளவர்களுக்கு மாவட்ட காவல்துறை அழைப்பு.!!

ஊர்காவல் படையில் பணி புரிய விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் ஊர்காவல் படை அலுவலகம் மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியிலிருந்து 28.09.2021-முதல் 13.10 2021-வரை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.


கோவை: ஊர்காவல் படையில் பணி புரிய ஆர்வமுள்ளவர்களுக்கு மாவட்ட காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.

கோவை மாவட்ட காவல்துறைக்கு உதவியாகத் தன்னார்வமாக கோயில் மற்றும் இதர பாதுகாப்புப் பணியில் தங்களுடைய ஓய்வு நேரத்தில் பணி செய்ய ஊர்காவல் படையில் சேவை செய்யத் தகுதியுள்ளோரிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் ஊர்காவல் படை அலுவலகம் மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியிலிருந்து 28.09.2021-முதல் 13.10 2021-வரை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அதற்கான பெட்டியிலோ 24.10.2021-ம் தேதி மாலை 17.00 மணிக்குள் சேர்க்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோவை மாவட்டம் கேட்டுக்கொள்கிறார்.

தகுதி மற்றும் இதர விபரம்.....

1)ஆண்,பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம். வயது 18-முதல் 45- வயதிற்குள் இருக்க வேண்டும் (01.09.2021 அன்று)

2)கல்வித்தகுதி-10-ம் வகுப்பு (தோல்வி அல்லது தேர்ச்சி)

3)பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்கான TC அல்லது மதிப்பெண் பட்டியல் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

4)நன்னடத்தை மற்றும் உடல் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும்.

5)கோவை மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள காவல் நிலைய எல்லையில் குடியிருப்போர் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

6)விண்ணப்பத்தின் அடிப்படையில் உடல்தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியுள்ளோர் தேர்வு செய்யப்படுவீர்.

7) அரசுப் பணியாளர்கள்/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிவோரும் விண்ணப்பிக்கலாம்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...