வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் கோவையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு குளிர்சாதன பேருந்துகள் இயக்கம்..!

ஏசி வசதியுடன் கூடிய 13 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் ஏசி பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஜூலை 3ம் தேதி முதல் பொது போக்குவரத்து வாகனங்களில் ஏ.சி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

மேலும், காற்று வசதிக்காக, ஜன்னல்களை திறந்து இயக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதனால், ஏசி-யுடன் இயங்கும் ஆம்னி பஸ்கள் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக, அரசிற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதையடுத்து, அரசு சார்பில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும், தற்போது மாவட்டத்திற்குள், மாவட்டங்களுக்கு இடையே மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இயக்கப்படும் பொதுத்துறை வாகனங்களில் 50 சதவீத இருக்கைகளுடன் உரிய கட்டுப்பாடுகளுடன் ஏசி பயன்படுத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோவை மாவட்டத்தில் இருந்து சேலம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் மீண்டும் ஏசி பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு ஏசி வசதியுடன் கூடிய 13 அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஏசி பஸ்களில் பராமரிப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...