காந்தி ஜெயந்தி தினத்தில் இறைச்சி கடைகளை மூட உத்தரவு- கோவை மாநகராட்சி ஆணையர்.!!

அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசால் ஆடு, மாடு, கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.


கோவை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆடு, மாடு, கோழி போன்ற விலங்கினங்களை வதை செய்வது அரசால் தடை செய்யப்பட்டு உள்ளது.

2021-ம்‌ ஆண்டு 02.10.2021 அன்று “காந்தி ஜெயந்தி தினம்‌” கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம்‌ தமிழக அரசால்‌ ஆடு, மாடு மற்றும்‌ கோழிகளை வதை செய்வதும்‌, இறைச்சிகளை விற்பனை செய்வதும்‌ தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும்‌ பன்றி இறைச்சிக் கடைகளை மூடும்படி இதன்‌ மூலம்‌ தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியால்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ உக்கடம்‌ ஆடு அறுவை மனை, சிங்காநல்லூர்‌ ஆடு அறுவை மனை, போத்தனூர்‌ மற்றும்‌ கணபதி மாடு அறுவை மனைகள்‌ செயல்படாது எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தரவை மீறிச் செயல்படுவோர்‌ மீது மாநகராட்சி அதிகாரிகளால்‌ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா ‌தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...