கோவையில் அனுமதியற்ற வீட்டுமனைகளை வரன்முறை செய்துக்கொள்ள அக்டோபர் 11 ஆம் தேதி சிறப்பு முகாம்!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்துக்கொள்வதற்கு அக்டோபர் 11 ஆம் தேதி சிறப்பு முகாம்கள் நடைபெறும் என ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி எல்லைக்குட்பட்டப் பகுதிகளில்‌ உள்ள அங்கீகரிக்கப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள்‌ மற்றும்‌ வீட்டுமனைகளை வருகின்ற அக்டோபர் 11 ஆம் தேதி மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு முகாமில் வரன்முறை செய்துக்கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கோயம்புத்தூர் உள்ளூர்‌ திட்டக்‌ குழுமத்தால்‌ வழங்கப்பட்ட மனைப்பிரிவில் உள்ள அனைத்துத் தனிமனைகளையும் வரன்முறை செய்துக்கொள்ளலாம். இதோடு ஜனவரி 1, 1980 க்கு பின்னர் மற்றும் 2016 அக்டோபர் 20 ஆம் தேதிக்கு முன்னர் பத்திரப்பதிவு செய்த மனைகளை வரன்முறை செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனை உரிமையாளர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி அனுமதியற்ற தங்களது மனைகளை வரன்முறை செய்துக்கொள்ளுங்கள் என அறிவிக்ப்பட்டுள்ளது. மேலும் இதற்காக உரிய ஆவணங்களுடன் வருகின்ற அக்டோபர் 11 ஆம் தேதி தேசிய முகாமில் விண்ணப்பித்து வரன்முறை கட்டணம் மற்றும் அபிவிருத்தி கட்டணங்களைச் செலுத்தி வரன்முறை செய்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதியற்ற மனையிடங்கள் வரன்முறை செய்யப்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் எந்தவிதப் பிரச்சனையும் இன்றி பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியும் எனவும் உங்களது மனையில் ஏதேனும் மாநகராட்சியின் கட்டிட அனுமதி, சாலை வசதி, பாதாளச் சாக்கடை வசதி மற்றம் குடிநீர் வசதி, சுகாதார வசதி உள்ளிட்டச் சேவைகளைப் பெற்றுக்காள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருகின்ற அக்டோபர் 11 ஆம் தேதி கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...