கோவை‌ மாநகராட்சி 24X7-குடிநீர்‌ சேவை மையம்‌ திங்கள்‌ முதல்‌ சனி வரை செயல்படும்‌.!

மேட்டுப்பாளையம்‌ சாலை, ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ உள்ள மாநகராட்சி வரி வசூல்‌ மையத்தில்‌ 24-மணி நேர குடிநீர்‌ திட்டத்தின்‌ கீழ்‌ முதல்‌ வாடிக்கையாளர்‌ சேவை செயல்படத் துவங்கியது. இம்மையம்‌ திங்கள்‌ முதல்‌ சனி வரை காலை 9-மணி முதல்‌ மாலை 5- மணி வரை செயல்படும்‌.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ 24-மணி நேரக் குடிநீர்‌ திட்டத்தின்‌ கீழ்‌ முதல்‌ வாடிக்கையாளர்‌ சேவை மையம்‌ மேட்டுப்பாளையம்‌ சாலை ஆர்‌.எஸ்‌.புரம்‌ பகுதியில்‌ உள்ள மாநகராட்சி வரி வசூல்‌ மையத்தில்‌ இன்று (01.10.2021) முதல்‌ செயல்படத் துவங்கியது.

இந்த மையத்தில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ குறித்த அனைத்து சேவைகளும்‌ வழங்கப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ தெரிவித்தார்கள்‌.

இம்மையம்‌ குறித்து ஆணையாளர்‌ தெரிவிக்கையில்‌, புதிய குடிநீர்‌ இணைப்புக்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல்‌. குடிநீர்‌ குழாய்‌ கசிவு, மாசுபட்ட நீர், குடிநீர்‌ பற்றாக்குறை உள்ளிட்ட அனைத்து புகார்களும்‌ பெற்றுக்‌ கொள்ளப்படும்‌. குடிநீர்‌ பட்டியலில்‌ உள்ள குறைபாடுகள்‌ சீர்‌ செய்ய வழிகாட்டப்படும்‌.

விரைவில்‌ குடிநீர்‌ கட்டணம்‌ ரொக்கம்‌, கடன்‌ அட்டை, கைப்பேசி செயலிகள்‌, தானியங்கி இயந்திரங்கள்‌ மூலம்‌ செலுத்தும்‌ வசதி ஏற்படுத்தப்படும்‌. 24-மணி நேர குடிநீர்‌ திட்டத்தின்‌ அவசியம்‌, செயல்முறை, கட்டணம்‌ முதலான அனைத்து ஐயங்களுக்கும்‌ உரிய விளக்கம்‌ அளிக்கப்படும்‌. என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...