கோவை மாவட்டத்தில் 192 இடங்களில் கிராமசபைக் கூட்டம்; இடைத்தேர்தல் நடைபெறும் 36 ஊராட்சிளில் நடைபெறாது – ஆட்சியர் சமீரன் தகவல்!

கோவை மாவட்டத்தில் நாளை 192 கிராமங்களில் கிராம சபைக்கூட்டம் நடைபெறும் எனவும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 36 ஊராட்சிகளில் விதிமுழைகளின் படி நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.


கோவை: நாடு முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை கிராம சபைக்கூட்டங்கள் நடைபெறவுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு கிராம சபைக்கூட்டங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது கொரோனா விதிமுறைகளின் படி கிராமச்சபைக்கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கோவை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் கிராம சபைக்கூட்டம் குறித்த தகவல்களை ஆட்சியர் சமீரன் செய்திக்குறிப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார். அதில் கொரோன தொற்றின் தாக்கம் சற்றுக்குறைந்துள்ள நிலையில், கிராம சபைக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகளைகளின் படி, கோவையில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் 36 ஊரட்சிகளைத்தவிர மீதமுள்ள 192 கிராமங்களில் நாளை காலை 10 மணிக்கு கிராம சபைக்கூட்டம் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார். மேலும் அனைத்துக்கிராமங்களிலும் கொரோனா விதிமுறைகளோடு கிராம சபைக்கூட்டம் நடைபெறும் என்பதை கிராம நிர்வாக அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதன் மூலம் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இதனை அரசு சட்டப்படி நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக கிராம சபைக்கூட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் நாளை நடைபெறவிருக்கும் கிராம சபைக்கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...