கோவை காந்தி கூடத்தில் உள்ள காந்தி படங்களை புதுப்பித்து அலங்கரிக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

பன் மொழிகளை கற்ற ஒருவரை அந்த புகைப்படக் கண்காட்சியில் பணியமர்த்தி பார்வையாளர்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கி உள்ளதாக தகவல்.


கோவை: கோவை அவிநாசி சாலை பகுதியில் உள்ள காந்தி கூடத்தில் உள்ள காந்தி படங்களை புதுப்பித்து அலங்கரிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை அவிநாசி ரோடு, மேம்பாலம் அருகில் அரசு காதிகிராப்ட் கட்டிடத்தின் ஒரு பகுதியில் காந்தி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

1973ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் தற்போதும் முறையான பராமரிப்பின்றி படங்கள் தூசி படிந்து செல்லரித்து அழிந்து வரும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், இது குறித்து இந்த அருங்காட்சியகத்தின் அருகில் காந்தியின் புகைப்படங்களையும் புதுப்பிக்குமாறு காதிகிராப்ட் உதவி இயக்குனருக்கும் அருங்காட்சியக பொறுப்பாளருக்கும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவுறுத்தி உள்ளார்.

இது குறித்து மக்கள் செய்தி தொடர்பு துறை அதிகாரி செந்தில் அண்ணா நம்மிடம் கூறும்போது:-

காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள புகைப்படங்களை புதுப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். பள்ளி மாணவ, மாணவியரை அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். பன் மொழிகளை கற்ற ஒருவரை அந்த புகைப்படக் கண்காட்சியில் பணியமர்த்தி பார்வையாளர்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...