தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் போறவங்களா? இதோ உங்களுக்கானப் பேருந்து முன்பதிவு இன்று தொடங்கியாச்சு!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச்செல்ல அரசுப்பேருந்துகளில் பயணிப்பவர்களான முன்பதிவு இன்று முதல் துவங்கியுள்ளது.



தீபாவளி பண்டிகை இந்தாண்டு நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் படிப்பு மற்றும் பணி நிமிர்த்தமாகச் சொந்த ஊரைவிட்டு பிற மாவட்டங்களில் பலர் தங்கியுள்ளனர்.

எனவே தீபாவளி திருநாளை முன்னிட்டு சொந்த ஊருக்கு வர வேண்டும் என நினைப்பவர்கள் ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே தங்களது பேருந்துப்பயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிடுகின்றனர். இதற்கான வசதியையும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஒவ்வொரு ஆண்டு ஏற்படுத்திவருகிறது.

அந்தவகையில் தற்போது தீபாவளி முந்தைய நாளான நவம்பர் 3 ஆம் தேதி சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. குறிப்பாக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல சொகுசு பஸ், படுக்கை வசதி மற்றும் குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே தீபாவளிக்கான தங்களது பேருந்துப் பயணத்தை https://www.tnstc.in/ என்ற இணையதளம், TNSTC ஆப் உள்ளிட்ட அரசு ஆப் மற்றும் தனியார் போக்குவரத்து ஆப்களிலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டு சுமார் 4 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டும், சிறப்புப் பேருந்து நிலையங்கள் அமைத்தல், சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பை தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் வெளியிடுவார் எனவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...