மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் சேருவதற்கான அரிய வாய்ப்பு. கோவையில் அக்.4 முதல் அக்.9 வரை சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு!

மத்திய அரசின் சாலையோர வியாபாரிகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்ற குடும்பத்தினர் தங்களது குடும்ப உறுப்பினர்களை பல்வேறு காப்பீடு திட்டத்தில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் அக்டோபர் 6 முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என கோவை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.


கோவை: மத்திய அரசின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. குறிப்பாக சாலையோர வியாபாரிகள்‌ மேம்பாட்டடுத்திட்டத்தின்கீழ்‌, வங்கிகள்‌ மூலம்‌ 10 ஆயிரம் ரூபாய் வரை மக்களுக்கு கடன் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இதன் மூலம் பயன்பெற்ற சாலையோர வியாபாரிகளின் குடும்ப உறுப்பினர்களை மத்திய அரசின் திட்டங்ளில் சேர்ந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக கீழ்வரும் பல்வேறு திட்டங்களில் சேர்வதற்காக கோவை மாநகராட்சியின் சார்பில் வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

மத்திய அரசின் திட்டங்கங்ளின் விபரங்கள்:

பிரதான்‌ மந்திரி சுரசஷா பீமா யோஜனா (மத்திய அரசின் விபத்துக்காப்பீட்டு திட்டம்)

பிரதான்‌ மந்திரி ஜீவன்‌ ஜோதிபீமாயோஜனா (மத்தியஅரசின்‌ ஆயுள்‌ காப்பீட்டு திட்டம்‌)

பிரதான்‌ மந்திரி ஷ்ரம்‌ யோகிமந்தன்‌ யோஜனா (மாதாந்திர பென்சன்‌ திட்டம்‌)

பிரதான்‌ மந்திரி ஜன்‌ தன்‌ யோஜனா (மத்திய அரசின்‌ மக்கள்‌ நிதி திட்டம்‌ - வங்கி கணக்கு, ஓரே நாடு ஒரே ரேஷன்‌ திட்டம் மாத்ரு வந்தனா யோஜனா (காப்பிணி பெண்களுக்கும்‌, இளம்‌ தாய்மார்களுக்கும்‌ தாய்மைத் திட்டம்‌)

ஜனனி சுரக்ச யோஜனா (அரசு மருத்துவமனையில்‌ பிரசவிக்கும்‌ பெண்களுக்கான திட்டம்‌) கட்டுமானம் மற்றும்‌ அது தொடர்பான பணியில்‌ உள்ள சாலையோர வியாபாரிகளின்‌ குடும்ப உறுப்பினர்களை பதிவு செய்தல்‌.

மேலும் இதில் எந்த திட்டங்களின் பயன்பெற வேண்டும் என்று நினைத்தாலும் பயனாளிகள், ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ்‌ வங்கி கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, புகைப்படம்‌, தாய்‌ சேய்‌ நல மைய அட்டை, வருமான சான்றிதழைக் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

எனவே, ஏற்கனவே வங்கிகள்‌ மூலம்‌ ரூ.10,000/-கடனுதவி பெற்ற சாலையோர வியாபார குடும்ப உறுப்பினாகள்‌, மேற்படி முகாமில்‌ கலந்து கொண்டு பயனடையுமாறு கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாள மற்றும்‌ தனி அலுவலா்‌ ராஜ கோபால்‌ சுன்கரா கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...