மகாளய அமாவாசை நாளன்று கோயில்கள் திறக்க அனுமதி இல்லை- கோவை மாவட்ட ஆட்சியர்.!!

கொரோனா ஊரடங்கு வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், 6-ம் தேதி மகாளய அமாவாசை நாளன்று கோயில்கள் திறக்க அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கொரோனா ஊரடங்கு வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், 6-ம் தேதி மகாளய அமாவாசை நாளன்று கோயில்கள் திறக்க அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தனர்.

கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தற்போது தமிழக அரசால் அரசாணை எண் 552-வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை 11.09.2021-ஒன்றின்படி ஊரடங்கு 31.10.2021-வரை நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாகத் திருக்கோவில்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு வெள்ளிக்கிழமை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருக்கோவிலில் நடைபெறும் நடை சாத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்காகக் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு 06.10.2021 -ஆம் தேதி மகாளய அமாவாசை நாளன்று கோவை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் சுவாமி திருக்கோயில், மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில், ஆகிய திருக்கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் ஆற்றோரங்களில் திதி மற்றும் தர்ப்பணம் செய்யவும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

திருக்கோவில்களில் சுவாமிக்கு நடைபெறும் பூஜை தொடர்ந்து நடைபெறும் மேற்படி விதி முறைகளைக் கடைப்பிடிப்பதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளும் நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் அனைவரும் முறையாகப் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...