கோவையில் அனுமதியற்ற வீட்டுமனைகளை வரன்முறை செய்யத் தேவையான ஆவணங்கள் என்னென்ன? இதோ மாநகராட்சி வெளியிட்ட தகவல்!

கோவையில் அனுமதியற்ற வீட்டுமனைகளை வரன்முறை செய்வதற்கு சுயச்சான்று அளிக்கப்பட்ட விற்பனை விபரம் போன்ற பல்வேறு ஆவணங்கள் அத்தியாவசியமாகத்தேவைப்படும் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.



கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் வீட்டுமனைகள் வருகின்ற அக்டோபர் 11 ஆம் தேதி மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு முகாமில் வரன்முறை செய்துக்கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கோயம்புத்தூர் உள்ளுர் திட்டக்குழுமத்தால் வழங்கப்பட்ட மனைப்பிரிவில் உள்ள அனைத்து தனிமனைகளையும் வரன்முறை செய்துக்கொள்ளலாம். இதோடு ஜனவரி 1, 1980க்கு பின்னர் மற்றும் 2016 அக்டோபர் 20 ஆம் தேதிக்கு முன்னர் பத்திரப்பதிவு செய்த மனைகளை வரன்முறை செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மேற்கொள்ளாவிடில் எதிர்காலத்தில் எந்தவிதப்பிரச்சனையும் இன்றி பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியும் எனவும் உங்களது மனையில் ஏதேனும் மாநகராட்சியின் கட்டிட அனுமதி, சாலை வசதி, பாதாளச்சாக்கடை வசதி மற்றும் குடிநீர் வசதி, சுகாதாரவசதி போன்றவற்றைப்பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் இந்த வரன்முறைகளை மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள வரன்முறை செய்ய தகுதியான மனைகள், கட்டணம், தேவையான ஆவணங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

வரன்முறை செய்துகொள்ளத் தகுதியான மனைகள்‌:-

01.01.1980க்கு பின்னர்‌ 20.10.2016க்கு முன்னர்‌ பத்திரபதிவு செய்த மனைகள்‌.

விற்கப்பட்ட மனைகள்‌ உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவிற்கு கோயம்புத்தூர்‌ உள்ளூர்‌ திட்டக்‌ குழுமத்தால்‌ 51” எண்‌ வழங்கப்பட்ட மனைப்பிரிவுகள்‌.

திட்ட சாலைகள்‌, நிலஎடுப்பு உச்சவரம்பு, நீர்நிலைகள்‌, விவசாயப் பூமி, அரசு புறம்போக்கு, பொது ஒதுக்கீடு இடங்கள்‌, கோபுர மின்கம்பிகள்‌ உட்பட உயா்‌அழுத்த மற்றும்‌ அதிக உயர்‌அழுத்த மின்‌ கம்பிகளின்‌ கீழ்‌ அமையும்‌ மனைகள்‌ ஆகியவற்றில்‌ அமையாத மனைகள்‌ ஆகியவை அடங்கும்.

மனை வரன்முறை செய்ய சமா்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்‌:-

பட்டா மற்றும்‌ புலஅளவைச்‌ சுவடியில்‌ உள்ள படியான மனைப் பரிமானம்‌ அல்லது மனை உட்பிரிவு மற்றும்‌ தொடர்புடையச் சாலையின்‌ அகலம்‌, ஆகிய விபரங்களுடன்‌ மனையின்‌ உரிமையாளர்‌ மற்றும்‌ அங்கீகாரம்‌ பெற்ற நிலஅளவையர்கள்‌ அல்லது கட்டிட விதிகளில்‌ குறிப்பிட்டுள்ள தொழில் சார்ந்த வல்லுநர்களால் கையொப்பமிட்ட தளவரைபடத்தைக் காட்டும்‌ வரைபட நகல்கள்‌ மூன்று.

வரன்முறை கோரும்‌ மனையின்‌ மனைப் பரிமாணம்‌, சாலை வலையமைப்பு, சாலையின்‌ அகலம்‌, பொது திறந்த வெளியின்‌ பரிமாணம்‌ மற்றும்‌ பொதுப் பயன்பாட்டு மனைகள்‌ மற்றும்‌ மனைப்பிரிவு அமைந்துள்ள கிராமத்தின்‌ நில அளவை எண்கள்‌ ஆகியவை அடங்கிய மனைப்பிரிவு வரைபடத்தின்‌ நகல்‌ ஒன்று.

மனைப்பிரிவு அமைந்துள்ள பகுதியின்‌ சுற்றுபுறங்களில்‌ உள்ள வளர்ச்சி மற்றும்‌ இணைப்புச்‌ சாலைகளை காட்டும்‌ சுற்றுபுற வரைபடத்தின்‌ நகல்‌ ஒன்று (1௦0௦ Sketch).

சுயச்சான்று அளிக்கப்பட்ட மனையின்‌ விற்பனை ஆவணம்‌ அல்லது உரிமை ஒப்பாவணம்‌.

விண்ணப்பதாரர்‌ பெயரில்‌ பெறப்பட்ட பட்டா, நிரந்தர நில பதிவுரு அல்லது நகர நிலஅளவை பதிவேடுகளின்‌ நகல்‌. அவ்வாறு அவை விண்ணப்பதாரர்‌ பெயரில்‌ பெறப்படாது இருப்பின்‌, முந்தைய நிலஉரிமையாளர்‌ பெயரில்‌ அந்த ஆவண நகல்கள்‌ இணைக்கப்படவேண்டும்‌.

விண்ணப்பம்‌ செய்யப்படும்‌ நாளிலிருந்து அதற்கு முன்னர்‌ ஒருவாரக் காலத்திற்குள்‌ பத்திர பதிவுத்துறையிலிருந்து பெறப்பட்ட வில்லங்கச் சான்றிதழ்‌.

மனைப்பகுதி விவசாய நிலத்தில்‌ அமையுமாயின்‌, அம்மனைப்பிரிவு பொது நீர்பாசன வாய்க்கால்களைத் தடை செய்யாமல்‌ உள்ளது என்பதற்கும்‌ வெள்ளப்‌ பெருக்க தாக்கத்தின்‌ அளவு ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம்‌ பெறப்பட்டச் சான்று அல்லது அதன்‌ நிலை குறித்த அறிக்கை சமர்பிக்க வேண்டும்‌.

மனை வரன்முறை செய்ய செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள்‌ விபரம்‌:-

மனை வரன்முறை கட்டணம்‌ சதுர மீட்டர்‌ ஒன்றிற்கு ரூ.150/ என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனை அரசு கணக்கில்‌ www.karuvoolam.tn.gov.in stem இணையதளத்தில்‌ செலுத்தப்பட வேண்டும்‌.

அபிவிருத்திக் கட்டணம்‌ சதுர மீட்டர்‌ ஒன்றிற்கு ரூ.500/- ஆகும். இந்தப்பணத்தை மாநகராட்சியால்‌ வழங்கப்படும்‌ சலான்‌ மூலம்‌ மாநகராட்சிக் கணக்கில்‌ இந்தியன்‌ ஓவர்சீஸ்‌ வங்கி, பெரியகடைவீதி கிளையில்‌ செலுத்தப்படவேண்டும்‌. செலுத்தவேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர் மற்றும்‌ தனி அலுவலா்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...