ஊரக உள்ளாட்சித் தேர்தல் கோவையில் டாஸ்மாக்கிற்கு 4-நாட்கள் விடுமுறை- ஆட்சியர் சமீரன் உத்தரவு.!!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் கோவையில் டாஸ்மாக்கிற்கு 4-நாட்கள் விடுமுறை கொடுத்து ஆட்சியர் சமீரன் உத்தரவு அளித்துள்ளார். விதிமுறைகளுக்கு முரணாக அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


கோவை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் கோவையில் டாஸ்மாக்கிற்கு 4-நாட்கள் விடுமுறை கொடுத்து ஆட்சியர் சமீரன் உத்தரவு அளித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் அன்னூர், ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், சர்க்கார் சாமகுளம், சுல்தான்பேட்டை, தொண்டாமுத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஆகிய பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதனை அடுத்து இப்பகுதி தேர்தல் நடைபெறும் இடங்களில் வரும் 7ஆம் தேதி காலை 10 மணி முதல் 9-ம் தேதி இரவு 12 மணிவரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 12-ஆம் தேதியும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் டாஸ்மார்க் கடைகள், பார்கள் அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ் மன்றம் போன்ற கிளப்புகளில் செயல்படும் மதுக்கடைகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை விடுமுறை அளிக்கப்படுகிறது.

விதிமுறைகளுக்கு முரணாக அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...