குரூப்-1 தேர்வு: கோவையில் 25-மையங்கள் தயார்- மாவட்ட ஆட்சியர் சமீரன்.!!

கோவையில் குரூப்-1 மத்திய அரசு குடிமைப் பணிக்கான தேர்வை ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்டத்தில் 10, 955-பேர் எழுதுகிறார்கள். 25-மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தகவல்.


கோவை: கோவையில் குரூப்-1 மத்திய அரசு குடிமைப் பணிக்கான தேர்வை ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்டத்தில் 10, 955-பேர் எழுதுகிறார்கள். 25-மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குடிமைப் பணிக்கான தேர்வினை கோவை மாவட்டத்தில் 25-மையங்களில், 10,955-நபர்கள் எழுதுகிறார்கள்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வருகிற 10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குடிமைப் பணிக்கான முதனிலைத் தேர்வு நடைபெறுகிறது.

கோவை மாவட்டத்தில் 25-தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. தேர்வினை 10,955-நபர்கள் எழுதுகின்றன.

25-தேர்வு மையங்களும் தலா ஒரு தேர்வு மைய ஆய்வு அலுவலர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 46-தேர்வு மைய துணை கண்காணிப்பாளர்கள், 931-அரை கண்காணிப்பாளர்களும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் செல்போன் ஜாமர் நிறுவப்பட்டுள்ளது. தேர்வு வளாகத்துக்குள் செல்போன் டிஜிட்டல் கைக்கடிகாரம் உள்ளிட்ட கருவிகள் எதையும் எடுத்து வர வேண்டாம். தேர்வர்கள் கருப்பு மை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேலும் தேர்வாளர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளில் ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் போன்ற ஏதாவது ஒன்று மத்திய மாநில அரசால் வழங்கப் பட்டுள்ள அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒன்றையும் உடனே எடுத்து வர அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

தேர்வு மையத்தில் தேர்வாளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும் தேர்வு மையங்களில் கை கழுவும் திரவம் மற்றும் முகக் கவசங்கள் வைக்கப்பட்டிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...