நாங்க தடுப்பூசி போட்டாச்சு, அப்ப நீங்க? கோவையில் 321-மையங்களில் கோவிட்‌-19 மெகா தடுப்பூசி முகாம்.!!!

தமிழக அரசு உத்தரவின்படி கோவிட்‌ -19 மெகா தடுப்பூசி முகாம்‌ 10.10.2021 அன்று காலை 7.00 மணி முதல்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதியில்‌ 321 மையங்களில்‌ நடைபெற உள்ளது.


கோவை: தமிழக அரசு உத்தரவின்படி கோவிட்‌ -19 மெகா தடுப்பூசி முகாம்‌ 10.10.2021 அன்று காலை 7.00 மணி முதல்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதியில்‌ 321 மையங்களில்‌ நடைபெற உள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ 85-90% நபர்கள்‌ முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொண்டுள்ளனர்‌. மேலும்‌ மாநகராட்சிப்‌ பகுதியில்‌ 1,25,000 நபர்கள்‌ இரண்டாம்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளத் தகுதியுடையவர்களாக உள்ளனர்‌.

கோவி ஷீல்டு முதல்‌ தடுப்பூசி செலுத்திக்‌ கொண்ட நபர்கள்‌ 84 நாட்களுக்குப் பிறகு இரண்டாம்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளலாம்‌. அதே போல கோவேக்சின்‌ முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொண்ட நபர்கள்‌ 28 நாட்களுக்குப் பிறகு இரண்டாம்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளலாம்‌.

இவர்கள்‌ அனைவரும்‌ வரும்‌ 10.10.2021 ஞாயிறு அன்று நடைபெறும்‌ மெகா தடுப்பூசி முகாமில்‌ கலந்து கொண்டு பயன்பெறலாம்‌. தடுப்பூசி செலுத்திக்‌ கொள்வதற்கும்‌, அசைவ உணவுகள்‌ எடுத்துக்‌ கொள்வதற்கும்‌ எந்தவித கட்டுப்பாடுகளும்‌ இல்லை என மருத்துவர்கள்‌ அறிவுறுத்துகின்றனர்‌.

எனவே, முதல்‌ தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளாதவர்களும்‌ மற்றும்‌ இரண்டாம்‌ தவணை தடுப்பூசி செலுத்தத் தகுதியுடையவர்கள்‌ அனைவரும்‌ முகாமில்‌ கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி நிர்வாகம்‌ சார்பாகக் கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...