மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப் பயணிகளுக்கு தடை..!

பாதுகாப்பு கருதி இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.


கோவை: மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த அதிக மழையின் காரணமாக கோவை குற்றாலத்திற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கோவை சாடிவயல் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது கோவை குற்றாலம். இப்பகுதி கோவை உட்பட பல்வேறு மேற்கு மண்டல மாவட்ட மக்களுக்கு சுற்றுலாத் தளமாக திகழ்கிறது.

இந்நிலையில், நேற்று இரவிலிருந்து கோவை குற்றாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று இரவு திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மீண்டும் மறு உத்தரவு வரும்வரை கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வனத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மேற்கு தொடர்ச்சி மலையில் மழை அதிகமாக பெய்துள்ளதால் கோவை குற்றாலத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரையும் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...