கோவை மேற்கு மண்டலத்தில்‌ வரும்‌ 13ம் தேதி பொதுமக்கள்‌ குறைதீர்க்கும்‌ முகாம்‌..! பொதுமக்கள் மனுக்கள்‌ கொடுத்து பயன்பெறலாம்‌ என அறிவிப்பு..!

கோவை மாநகராட்சி ஆணையர் தலைமையில்‌ வரும்‌ 13ம் தேதி காலை 10.30 மணி முதல்‌ 12.00 மணி வரை பொதுமக்கள்‌ குறைதீர்க்கும்‌ முகாம்‌ நடைபெறுகிறது.


கோவை: கோவையில் நடைபெறும் சிறப்பு மக்கள்‌ குறைதீர்க்கும்‌ முகாமில் பொது மக்கள்‌ கோரிக்கை மனுக்கள்‌ கொடுத்து பயன்பெறலாம்‌ என மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்கரா, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி பகுதிகளில்‌ சொத்து வரி விதிப்பு, காலியிட வரி விதிப்பு, சொத்துவரி பெயர்‌ மாற்றம்‌, தொழில்‌ வரி விதித்தல்‌, தொழில்‌ உரிமம்‌ வழங்குதல்‌ மற்றும்‌ புதுப்பித்தல்‌, குடிநீர்‌ இணைப்பு வழங்குதல்‌, பாதாள சாக்கடை இணைப்பு வழங்குதல்‌ மற்றும்‌ பொது மக்கள்‌ தங்கள்‌ பகுதியில்‌ மின்விளக்குகள்‌, குடிநீர்‌ வசதி, சுகாதாரம்‌ போன்ற அடிப்படை வசதிகள்‌ குறித்தும்‌, பொது மக்களின்‌ கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும்‌ வகையில்‌ ஒவ்வொரு மாதமும்‌ அந்தந்த மண்டல அலுவலகங்களில்‌ ஏற்கனவே பொதுமக்கள்‌ குறைதீர்க்கும்‌ முகாம்‌ நடைபெற்று வந்தது.

கடந்த 2020ம்‌ ஆண்டு முதல்‌ கொரோனா தொற்றின்‌ காரணமாக பொதுமக்கள்‌ குறைதீர்க்கும்‌ முகாம்‌ தற்காலிகமாக தமிழக அரசின்‌ வழிகாட்டுதலின்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும்‌ நிலையில்‌ மண்டல அலுவலகங்களில்‌ பொதுமக்களின்‌ குறைகளை நிவர்த்தி செய்வதற்கு மீண்டும்‌ பொது மக்கள்‌ குறைதீர்க்கும்‌ முகாமினை தமிழக அரசு அறிவித்த நிலையான வழிகாட்டுதலின்படி பொது மக்கள்‌ குறைதீர்க்கும்‌ முகாம்‌ கீழ்க்கண்டவாறு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, வரும்‌ 13.10.2021 புதன்கிழமை அன்று காலை 10.30 மணி முதல்‌ 12.00 மணி வரை மேற்கு மண்டலத்தில்‌ பொதுமக்கள்‌ குறைதீர்க்கும்‌ முகாம்‌ மாநகராட்சி ஆணையர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற உள்ளது.

எனவே, பொதுமக்கள்‌ தமிழக அரசின்‌ வழிகாட்டுதலின்படி முகக்கவசம்‌ அணிந்தும்‌, சமூக இடைவெளியினை பின்பற்றியும்‌ அந்தந்த மண்டலங்களில்‌ நடைபெறும்‌ குறைதீர்க்கும்‌ முகாமில்‌ தங்கள்‌ கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்கரா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...