ஆயுத பூஜை: கோவை கோட்டத்தில் இருந்து 260 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்

சிங்காநல்லூர், காந்திபுரம், உக்கடம் பஸ் நிலையங்களில் இருந்து வருகிற 13-ஆம் தேதி காலை முதல் 16 ஆம் தேதி வரை இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது..


கோவை: வரவிருக்கும் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, கோவை கோட்டத்தில் இருந்து 260 சிறப்பு பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளது, என அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 14-15ஆம் தேதிகளில், சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, கோவையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காக, அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது.

அதன்படி, கோவையில் இருந்து சேலத்திற்கு 25, மதுரைக்கு 30, தேனி மற்றும் கம்பம் செல்ல தலா 10 பேருந்துகளும், நெல்லை, ராஜபாளையம், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு மொத்தம் 25 பேருந்துகளும் , உதகையிலிருந்து, சேலம், திருச்சி மதுரைக்கு 20 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

மேலும், திருப்பூரில் இருந்து மதுரைக்கு 40, தேனி, கம்பத்துக்கு தலா 15, திருச்சிக்கு 30, என மொத்தம் 100 பேருந்துகள் இயக்கப்படும். மேலும்,

ஈரோட்டில் இருந்து மதுரைக்கு 20, திருச்சிக்கு 10, சேலத்திற்கு 10, பேருந்துகள் என மொத்தம் 40 பேருந்துகள் உட்பட கோவை மாவட்டத்தில் 260 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

மேலும், சிங்காநல்லூர், காந்திபுரம், உக்கடம் பஸ் நிலையங்களில் இருந்து வருகிற 13-ஆம் தேதி காலை முதல் 16 ஆம் தேதி வரை இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...