மீண்டும்‌ புதுப்பொலிவுடன்‌ 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டம்-ராஜ கோபால்‌ சுன்கரா.!!!

தமிழ்நாடு அரசின்‌ மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை ஏழை-எளியோர்க்கு இலவச பன்முனை மருத்துவப்‌ பரிசோதனை மற்றும் சிகிச்சைத்திட்டமான கலைஞரின்‌ வரும்‌ முன்‌ காப்போம்‌ என்ற திட்டத்தை மீண்டும்‌ புதுப்பொலிவுடன்‌ செயல்படுத்த முனைந்துள்ளது.


கோவை: தமிழ்நாடு அரசின்‌ மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை ஏழை-எளியோர்க்கு இலவச பன்முனை மருத்துவப்‌ பரிசோதனை மற்றும் சிகிச்சைத்திட்டமான கலைஞரின்‌ வரும்‌ முன்‌ காப்போம்‌ என்ற திட்டத்தை மீண்டும்‌ புதுப்பொலிவுடன்‌ செயல்படுத்த முனைந்துள்ளது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ தமிழகத்தில்‌ உள்ள அனைத்து மாவட்டங்களிலும்‌ ஒரு வட்டாரத்திற்கு மூன்று முகாம்‌ வீதம்‌ மொத்தம்‌ ஒரு வருடத்திற்கு 1155-முகாம்களும்‌ நகர்ப்புறங்களில்‌ ஒரு மாநகராட்சிக்கு நான்கு முகாம்‌ வீதம்‌ ஒரு வருடத்திற்கு 80-முகாம்களும்‌, இதில்‌ கோவை மாவட்டத்தில்‌ ஊரக பகுதியில்‌ 36-முகாம்களும்‌ மாநகராட்சியில்‌ 4-நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒருவருடத்திற்கு 1250-முகாம்கள்‌ என்ற இலக்கில்‌ நடைமுறைப்‌ படுத்த உத்தேசித்துள்ள இத்திட்டம்‌ அந்தந்த பகுதிகளில்‌ குறிப்பிட்ட நாட்களில்‌ காலை 9-மணி தொடங்கி மாலை 4-மணி முடியச் செயல்‌ படுத்தப்படும்‌. இத்திட்டத்தை மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்கள்‌ 29.9.2021- அன்று சேலம்‌ மாவட்டம்‌ வாழப்பாடியில்‌ தொடங்கி வைத்தார். இத்திட்டம்‌ கோவை மாநகராட்சியில்‌ 12.10.2021-சின்னவேடம்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில்‌ துவங்கவுள்ளது.

இந்தத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ பொதுமக்களுக்கு, பொது மருத்துவம்‌, பொது அறுவை சிகிச்சை மருத்துவம்‌, குழந்தைகள்‌ நல மருத்துவம்‌, மகப்பேறு மற்றும்‌ பெண்கள்‌ நல மருத்துவம்‌, கண்‌ மருத்துவம்‌, காது - மூக்கு - தொண்டை மருத்துவம்‌, இது போன்ற பத்து வகையான சிறப்பு மருத்துவர்களால்‌ நோயைக்‌ கண்டறிந்து அதற்கான முதல்‌ சிகிச்சைகளும்‌ செய்யப்படும்‌.

இலவசமாக இரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட்‌, இ.சி.ஜி. மற்றும்‌ எக்கோ பரிசோதனைகளும்‌ செய்யப்படும்‌. மருத்துவ பரிசோதனைக்குப்‌ பின்னர்‌ முகாமிலேயே முதல்‌ சிகிச்சையும்‌, இலவசமாக மருந்துகளும்‌ வழங்கப்படும்‌.

மேற்பரிந்துரை தொடர்‌ சிகிச்சை தேவைப்படின்‌, நோயின்‌ தன்மையைப்‌ பொறுத்து முதலமைச்சரின்‌ விரிவான காப்பீட்டுத் திட்டம்‌ மூலமாக அரசு மற்றும்‌ தனியார்‌ மருத்துவமனைகளுக்கு மக்கள்‌ பரிந்துரை செய்யப்படுவர்‌.

மேலும்,‌ இம்முகாம்களில்‌ பொதுமக்களுக்குப் பயனளிக்கும்‌ வகையில்‌ கோவிட்‌ தடுப்பூசிகள்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்‌ வழங்கப்படும்‌. முகாமின்‌ போது சித்த மருத்துவம்‌ உள்ளிட்ட பல்துறை விளக்கக் கண்காட்சி மற்றும்‌ வழிகாட்டுதல்‌ மையம்‌ ஆகியவை செயல்படும்‌.

இம்முகாம்கள்‌ மூலம்‌ மக்கள்‌ தங்கள்‌ வசிக்கும்‌ பகுதிக்கு அருகாமையிலேயே நோய்க்கான சிகிச்சையும்‌ ஆலோசனையும்‌ ஆரம்ப நிலையிலே பெற ஏதுவாகும்‌. பொது மக்கள்‌ இந்த வாய்ப்பினை பயன்படுத்தி "வரும்முன்‌" காத்து நோயற்று வாழ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா கேட்டுக்கொள்கிறார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...