வாடகை செலுத்தாமல்‌ உள்ள கோவை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் பூட்டி சீல்‌- மாநகராட்சி ஆணையாளர்‌ உத்தரவு.!!

ஏர்டெல்‌ நிறுவனத்திடமிருந்து நிலுவையிலிருந்த ரூ.1.73 கோடியும்‌, ஜியோ டிஜிட்டல்‌ நிறுவனத்திடமிருந்து ரூ.9.00 கோடியும்‌ ஆகமொத்தம்‌ ரூ.10.73கோடி கடந்த ஒரு மாத காலத்தில்‌ வசூல்‌ செய்யப்பட்டு மாநகராட்சியின்‌ நிதியில்‌ வரவாக்கப்பட்டுள்ளது.


கோவை: நீண்டகாலமாக கோவை மாநகராட்சி கடைகளின்‌ வாடகையினை செலுத்தாமல்‌ இருந்தவர்களின்‌ கடைகளை பூட்டி சீல்‌ வைக்க மாநகராட்சி ஆணையாளர்‌ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டல பகுதிகளிலும்‌ கண்ணாடி இழைவடம்‌ ( Optic Fibre Cable) அமைத்ததற்கான தட வாடகைக்‌ கட்டணம்‌ 2016 - 2017-ம்‌ ஆண்டு முதல்‌ 2020 - 2021 ஆண்டு முடிய ரூ.1.73 கோடியினை ஏர்டெல்‌ நிறுவனமும்‌ 2018- 2019 ம்‌ ஆண்டு முதல்‌ 2021 - 2022 ஆண்டு முடிய ரூ.9.48 கோடியினை ஜியோ டிஜிட்டல்‌ நிறுவனமும்‌ செலுத்தாமல்‌ நிலுவையில்‌ வைத்திருந்தனர்‌.

மாநகராட்சி ஆணையாளர்‌ உத்தரவின்‌ பேரில்‌ மேற்படி நிலுவைத் தொகைகளை வசூல் செய்யத் தொடர் நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு ஏர்டெல்‌ நிறுவனத்திடமிருந்து நிலுவையிலிருந்த ரூ.1.73 கோடியும்‌, ஜியோ டிஜிட்டல்‌ நிறுவனத்திடமிருந்து ரூ.9.00 கோடியும்‌ ஆகமொத்தம்‌ ரூ.10.73கோடி கடந்த ஒரு மாத காலத்தில்‌ வசூல்‌ செய்யப்பட்டு மாநகராட்சியின்‌ நிதியில்‌ வரவாக்கப்பட்டுள்ளது.

வரியில்லா இனங்களைப் பொறுத்தவரை நீண்டகாலமாக மாநகராட்சி கடைகளின்‌ வாடகையினை செலுத்தாமல்‌ இருந்தவர்களின்‌ கடைகளை பூட்டி சீல்‌ வைக்கும்‌ நடவடிக்கைகள்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ உத்திரவின்படி மத்திய மண்டலத்திற்குட்பட்ட தியாகி குமரன்‌ மார்க்கெட்‌ கடைகள்‌, தொட்டராயன்‌ கோவில்‌ வீதி கடைகள்‌, பட்டேல்‌ ரோடு கடைகள்‌, அவினாசி ரோடு வணிக வளாக கடைகள்‌ மேற்கு மண்டலத்திற்குபட்பட்ட திருவேங்கட சாமி ரோடு கடைகள்‌, இராமசந்திரா ரோடு கடைகள்‌ கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட இராம கிருஷ்ணாபுரம்‌ வணிக வளாக கடைகள்‌ மற்றும்‌ வடக்கு மண்டலத்திற்குட்பட்ட துடியலூர்‌ வணிக வளாக கடைகள்‌ ஆகியவற்றில்‌ மேற்கொள்ளப்பட்டது.

இதன்‌ காரணமாக நீண்டகாலமாக நிலுவை வைத்திருந்த வாடகைதார்கள்‌ கடந்த 20 தினங்களில்‌ மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளின்‌ வாடகையாக ரூ.2.77 கோடி செலுத்தியுள்ளனர். நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல்‌ உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான கடைகளை பூட்டி சீல்‌ வைக்கும்‌ நடவடிக்கைகள்‌ தொடர்ந்து நடைபெறும்‌.

இதேபோல்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ அமைந்துள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டிடங்களில்‌ நடத்தப்பட்டு வரும்‌ நியாய விலை கடைகளின்‌ (Ration Shop) கட்டிட வாடகை ரூ.1.07 கோடியினை செலுத்த கோரி உணவு பொருள்‌ வழங்கல்‌ மற்றும்‌ நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர்‌, சென்னை ஒருங்கிணைந்த குழந்தைகள்‌ மேம்பாட்டுத் திட்ட அலுவலகத்தால்‌ நடத்தப்பட்டு மாநகராட்சி கட்டிடங்களுக்கான நிலுவை வாடகை ரூ. 0.34 கோடியினை செலுத்த கோரி இயக்குநா்‌ மற்றும்‌ பணி இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தைகள்‌ மேம்பாட்டுச் சேவை அலுவலகம்‌, சென்னைக்கு கடிதங்கள்‌ அனுப்பப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின்படி மாநகராட்சிக்கு வரியில்லா இனங்கள்‌ மூலம்‌ வரவேண்டிய வருவாயினை வசூல்‌ செய்யத் தனிக்‌ கவனம்‌ செலுத்தி நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...