கோவை மாநகராட்சியின்‌ ஜந்து மண்டலங்களிலும்‌ தனி மனைகளை வரன்முறை செய்ய மொத்தம்‌ 686 விண்ணப்பங்கள் வருகை..!

மொத்தம்‌ வரப்பெற்ற 686 விண்ணப்பங்களில்‌ 464 தகுதியானவை, 222 தகுதியற்றவை, 460 விண்ணப்பங்கள்‌ நிலுவையில்‌ உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: தனி மனைகளை வரன்முறை செய்ய கோவை மாநகராட்சியின்‌ ஜந்து மண்டலங்களிலும்‌ மொத்தம்‌ 686 விண்ணப்பங்களில்‌ வந்ததாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அரசாணை (நிலை) எண்‌.78, வீட்டு மற்றும்‌ நகர்புற வளர்ச்சித்‌ (UD4(3)) துறை, நாள்‌.04.05.2017 மற்றும்‌ அரசாணை எண்‌.172, வீட்டு மற்றும்‌ நகா்புற வளர்ச்சித்‌ (UD4(3)) துறை நாள்‌.13.10.2017-ன்‌ படி, கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில்‌ உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகளில்‌ உள்ள விற்கப்பட்ட தனி மனைகளை வரன்முறை செய்து கொள்ள கோவை மாநகராட்சியின்‌ ஐந்து மண்டல அலுவலகங்களில்‌ நேற்று (11.10.2021) காலை 10.00 மணி முதல்‌ 5.00 மணி வரை முகாம்‌ நடத்தப்பட்டது.

இவற்றில்‌ வடக்கு மண்டலத்தில்‌ வரப்பெற்ற 239 விண்ணப்பங்களில்‌ 23 தகுதியானவை, 215 தகுதியற்றவை, ஒரு விண்ணப்பத்திற்கு வரன்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது. 215 விண்ணப்பங்கள்‌ நிலுவையில்‌ உள்ளது.

கிழக்கு மண்டலத்தில்‌ வரப்பெற்ற 174 விண்ணப்பங்களில்‌ 40 தகுதியானவை, 134 தகுதியற்றவை, 40 விண்ணப்பங்கள்‌ நிலுவையில்‌ உள்ளது.

மேற்கு மண்டலத்தில்‌ வரப்பெற்ற 126 விண்ணப்பங்களில்‌ 124 தகுதியானவை, 2 தகுதியற்றவை, 3 விண்ணப்பங்களுக்கு வரன்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது. 121 விண்ணப்பங்கள்‌ நிலுவையில்‌ உள்ளது.

தெற்கு மண்டலத்தில்‌ வரப்பெற்ற 100 விண்ணப்பங்களில்‌ 48 தகுதியானவை, 52 தகுதியற்றவை, 48 விண்ணப்பங்கள்‌ நிலுவையில்‌ உள்ளது.

மத்திய மண்டலத்தில்‌ வரப்பெற்ற 47 விண்ணப்பங்களில்‌ 36 தகுதியானவை 11 தகுதியற்றவை 36 விண்ணப்பங்கள்‌ நிலுவையில்‌ உள்ளது.

கோவை மாநகராட்சியின்‌ ஜந்து மண்டலங்களிலும்‌ மொத்தம்‌ வரப்பெற்ற 686 விண்ணப்பங்களில்‌ 464 தகுதியானவை, 222 தகுதியற்றவை, 460 விண்ணப்பங்கள்‌ நிலுவையில்‌ உள்ளன.

மேலும்‌, மனை வரன்முறை செய்ததில்‌ வரப்பெற்ற மொத்த தொகை ரூ.11,54,150/- என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்௧கரா இ.ஆ.ப., அவர்களால்‌ தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...