சாதனை புரிந்த பெண்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்: கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்.!!

சாதனைகள் செய்த பெண்கள், மாநில விருது பெற மாவட்ட சமூக அலுவலா், அறை எண் 5, மாவட்ட ஆட்சியரகம், கோவை என்ற முகவரிக்கு வருகின்ற நவம்பா் 10-ஆம் தேதி, மாலை 5-மணிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்.


கோவை: கோவையில் சாதனை புரிந்த 18-வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகள், அரசு விருது பெற நவம்பா் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

தேசிய பெண்குழந்தை தினம் ஜனவரி 24-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த தினத்தில் மாநில அரசு சார்பாக நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பாகச் சாதனை புரிந்த 18-வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாநில அரசு விருது, காசோலை ரூ.1-லட்சம் மற்றும் பாராட்டுப் பத்திரம் வழங்கப்படுகிறது.

2022-ஆம் ஆண்டுக்கான மாநில அரசின் விருதுக்கு, சாதனை புரிந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர், டிசம்பா் 31-ஆம் தேதி அன்று 5- வயதுக்கு மேல் 18-வயதுக்குள் இருக்க வேண்டும். தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தைத் தடுத்தல் மற்றும் தவிர்த்தல், சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் உள்ளிட்ட சாதனைகள் செய்த பெண்கள், மாநில விருது பெற மாவட்ட சமூக அலுவலா், அறை எண் 5, மாவட்ட ஆட்சியரகம், கோவை என்ற முகவரிக்கு வருகின்ற நவம்பா் 10-ஆம் தேதி, மாலை 5-மணிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...