மேட்டுப்பாளையம்‌ சாலையில் உள்ள பிரதான குழாயில்‌ கசிவு..!! மூன்று நாட்களுக்குக் குடிநீர்‌ விநியோகம்‌ செய்ய இயலாது - மாநகராட்சி ஆணையர்

வரும் 23ம் தேதி முதல் 25 வரை மூன்று நாட்களுக்கு கவுண்டம்பாளையம்‌ மற்றும்‌ வடவள்ளி பகுதிகளுக்குக் குடிநீர்‌ விநியோகம்‌ செய்ய இயலாது என மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜகோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., தகவல்‌ தெரிவித்தார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மேற்கு மண்டலம்‌ மேட்டுப்பாளையம்‌ சாலையிலுள்ள பிரதான குழாயில்‌ கசிவு ஏற்பட்டுள்ளதால்‌ 23.10.2021, 24.10.2021 மற்றும்‌ 25.10.2021 ஆகிய மூன்று நாட்களுக்கு கவுண்டம்பாளையம்‌ மற்றும்‌ வடவள்ளி பகுதிகளுக்குக் குடிநீர்‌ விநியோகம்‌ செய்ய இயலாது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜகோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ தகவல்‌ தெரிவித்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, கவுண்டம்பாளையம்‌, வடவள்ளி மற்றும்‌ வீரகேரளம்‌ கூட்டுக் குடிநீர் திட்டத்தின்‌ கீழ்‌ வரும்‌ மேற்கு மண்டலம்‌

மேட்டுப்பாளையம்‌ சாலையில்‌ உள்ள பிரதான குழாயில்‌ கசிவு ஏற்பட்டு சரிசெய்யும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதால்‌ கவுண்டம்பாளையம்‌ மற்றும்‌ வடவள்ளி பகுதிகளுக்கு இன்று 23.10.2021 (சனிக்கிழமை), 24.10.2021 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும்‌ 25.10.2021 (திங்கட்கிழமை) ஆகிய மூன்று நாட்களுக்குக் குடிநீர்‌ விநியோகம்‌ செய்ய இயலாது என்பதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ ராஜகோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்களால்‌ தகவல்‌ தெரிவிக்கப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...