அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒதுக்கீடு: கோவை மாவட்ட ஆட்சியர்.!!

அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் மனைகளுக்கு அக்டோபர் 28 -ஆம் தேதி குலுக்கல் முறையில் குடியிருப்புகள் மற்றும் மனைகள் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.


கோவை: அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் மனைகளுக்கு அக்டோபர் 28 -ஆம் தேதி குலுக்கல் முறையில் குடியிருப்புகள் மற்றும் மனைகள் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கோவை வீட்டுவசதி பிரிவு பொன்னையராஜபுரம் சுய நிதி திட்டம், அடுக்குமாடிக் குடியிருப்புக்கள், வெள்ளக்கிணறு சுய நிதி திட்டம். பகுதி-2, நிலை-3, உடுமலை எஸ். எம்,டி, திட்டம், சிங்காநல்லூர் 168-திட்டம், சிங்காநல்லூர் 104-திட்டம், சிங்காநல்லூர் 21-வீடுகள் சுயநிதி திட்டம், பெரியநாயக்கன்பாளையம் திட்டம், காலி மனைகள், அண்ணாநகர் திட்டம், மனை மற்றும் தோராய விலையில் உப்பிலி பாளையம் 272-திட்டம், வெள்ளக்கிணறு பகுதி-2. நிலை 2, சுயநிதி திட்டங்களில் காலியாக உள்ள வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், மற்றும் மனைகளுக்கு அக்டோபர் 1-ஆம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள், வரும் 28-ம் தேதி வியாழக்கிழமை குலுக்கல் முறையில் குடியிருப்புகள் மற்றும் மனைகள் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

இக்குழுக்கல் சிவானந்தா காலனி, டாடாபாத்தில் உள்ள செயற்பொறியாளர் நிர்வாக அலுவலர் கோவை வீட்டு வசதி வாரிய பிரிவு அலுவலக வளாகத்தில் காலை 11-மணி அளவில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு 0422-2493359, 94423-23251 என்ற தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...