குடிநீருக்கான டெபாசிட் தொகையை நாளை மறுநாளுக்குள் செலுத்த மாநகராட்சி உத்தரவு

கோவை மாநகராட்சி வார்டுப் பகுதியில் வசித்து வரும் மக்கள் குடிநீர் இணைப்புக்கான, டெபாசிட் தொகையை நாளை மறுநாள் (செப்டம்பர் 15)-க்குள் செலுத்த மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்கு நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில், சொத்து வரி சீராய்வு, குப்பை வரி, பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம், குத்தகை மற்றும் ஏல இனங்கள் வசூலிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

புதிதாக வீட்டு குடிநீர் இணைப்பு பெற, ரூ.5,000 மற்றும் வணிக பயன்பாட்டுக்கு ரூ.10 ஆயிரம் டெபாசிட்டாக செலுத்த வேண்டும். இதற்கு முன் இணைப்பு பெற்றவர்கள் வீட்டு இணைப்புக்கு ரூ.1,000 மற்றும் வணிக பயன்பாட்டுக்கு ரூ.3,000 செலுத்தி இருந்தனர். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 2 லட்சம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. 2013, அக்டோபர் 1ம் தேதிக்குப் பின் இணைப்பு பெற்றவர்கள் டெபாசிட் தொகையில் நிலுவை உள்ளது. இதனை வரும், 15-க்குள் செலுத்த வேண்டுமென மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதனிடையே, கோவை மாநகராட்சி புதிய வரி சீராய்வு என்ற பெயரில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவது, குப்பைகளுக்கு வரி போடுவது, குடிநீர் இணைப்புகளுக்கு வைப்புத் தொகையாக 4,000 ரூபாய் செலுத்த வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு நிர்வாக சீர்கேடுகளில் ஈடுபட்டு வருவதைக் கண்டித்து பல்வேறு வார்டுப் பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...