ஒவ்வொரு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறப்பு மருத்துவ சேவை - மாநகராட்சி

தேசிய நகர்புற சுகாதார இயக்கத்தின் கீழ், நகர்புறங்களில் வசிக்கும் மக்களின், குறிப்பாக எளிதில் தொற்று நோய் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய இடங்களில் வசிப்போர், குடிசைவாசிகள், வீடற்ற சாலையோரம் வசிப்போர், சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற தொழில் புரிவோர் மற்றும் ஏழை எளிய மக்களின் சுகாதாரத்தினை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேற்படி சேவைகளை வலுப்படுத்தும் விதமாக நகர்புற மக்களுக்கு சிறப்பு மருத்துவ சேவைகளை அவர்களுக்கு உகந்த நேரத்தில் வழங்கிடவும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பினை கண்டறிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காத்திருக்க வேண்டிய காத்திருப்பு நேரத்தை தவிர்க்கவும், அம்மருத்துவமனைகளில் கூட்ட நெரிசலை குறைத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, மாநகராட்சிக்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மற்றும் சமுதாய நல மையங்களில் (சிங்காநல்லூர், எம்.எம்.ஹோம், பீளமேடு, செல்வபுரம் மற்றும் எஸ்.எல்.எம்.ஹோம்) பல்துறை மருத்துவ சேவைகள் தொடங்க முடிவு செய்யப்பட்டு 5 நகர்புற சமுதாய நல மையங்களில், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 4:30 மணி முதல் 8:30 மணி வரை, குறிப்பிட்ட சிறப்பு மருத்துவரால் மருத்துவ சேவை கீழே குறிப்பிட்ட நாட்களில் வழங்கப்படுகிறது.

திங்கள் - பொது மருத்துவம்

செவ்வாய் - மகப்பேறு மருத்துவம்

புதன் - குழந்தை நல மருத்துவர்

வியாழன் - எலும்பு நோய் மருத்துவர் மற்றும இயங்கியல்

வெள்ளி - மாதத்தின் முதல் வெள்ளி கண் மருத்துவம், மாதத்தின் இரண்டாம் வெள்ளி பல் மருத்துவம், மாதத்தின் மூன்றாம் வெள்ளி காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மாதத்தின் நான்காம் வெள்ளி தோல் மருத்துவம்.

பொதுமக்கள் மேற்படி 5 நகர்புற சமுதாய சுகாதார மையங்களை அணுகி சிறப்பு மருத்துவ சேவைகளின் பயனை பெறுமாறு மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...