தீராத நோய்களை தீர்க்கும் பருத்தியை பற்றி தெரியுமா?

பிரம்மை நோய்: கற்பனையில் ஒரு சிலர் தங்களுக்கு கை வலி, கால் வலி என கூறுவார்கள். மருந்தால் இது சரியாகாது. இது மனஅழுத்தம் ஏற்பட்டு அதனால் நரம்பு மண்டலம் பாதிப்படைந்து உண்டாகும் நோயாகும். இதற்கு பருத்தி வேரின் பட்டையை அரைலிட்டர் தண்ணீரில் போட்டு பாதியளவு சுண்டும் வரை காய்ச்சி வடிக்கட்டி 30மிலி அளவில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் நரம்பு கோளாறுகள் அதனால் ஏற்படும் கற்பனை நோய்கள் நீங்கும்.



செரிமானம்: இன்று பலருக்கும் இருப்பது செரிமான பிரச்சனை தான். இந்த செரிமான பிரச்சனக்கு மருந்தாக பருத்தி பயன்படுகிறது.

வலிமைக்கு: இலைக்கொழுந்தை நிழலில் காயவைத்து குடிநீரிட்டு கழிச்சல்களுக்கு கொடுத்தால் கழிச்சல் நிற்கும். உடல் வலிமை பெரும்.



வெள்ளை படுதல்: 30 கிராம் இலை அல்லது மொக்கை எடுத்து மசிய அரைத்து 80 மிலி பசும்பாலில் கலந்து காலையில் ஒரு வேளை மட்டும் குடித்து வந்தால் பெண்களின் வெள்ளைப்படுதல் முதலிய சிறுநீரக கோளாறுகள் நீங்கும்.



வயிற்று கடுப்பு: தீராத வயிற்று கடுப்பு ஏற்பட்டால் இலைச்சாறு 30மிலி எடுத்து 150 பசும்பாலில் கலந்து காலை மாலை குடித்து வந்தால் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும்.



காயங்களுக்கு: பூ அல்லது பருத்தி விதைகளை அரைத்து பற்றுபோட தீக்காயங்கள் ஆறும். பஞ்சை கருக்கிப்பொடித்து புரையோடிய புண்களுக்கு தடவ விரைந்து ஆறும். விதைகளை தோள் நீக்கி பொடித்து ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை 200மிலி பசும்பாலில் கலந்து குடித்து வர நரம்பு மண்டலம் வலுப்பெறும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...