குழந்தைகளின் நியாபக சக்தி அதிகரிக்க, தினமும் இதை 2 முறை செய்தாலே போதும்!

பால் மற்றும் பால் பொருட்களில் அறிவாற்றலை பெருக்கும் புரோட்டின் ,பொட்டாசியம் ,கால்சியம் , வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இது நரம்பு மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மூளை செல்களையும் நன்கு செயல்பட வைக்கிறது ,இதனால் அவர்களை சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கிறது.



ஸ்ட்ராபெர்ரி செர்ரி ,அவுரி நெல்லி ,நாவல் போன்ற பழங்களில் மூளைக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஒமேகா 3சத்து மூளையின் வெளி பகுதியை பாதுகாக்கிறது. மேலும் மூளைக்கு தேவையான ஊட்டச்சத்து வழங்குகிறது.



மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் கோலைன் சத்து செல் முட்டையில் அதிகம் உள்ளது .இதை குழந்தைகள் உண்பதால் மூளை களைப்படையாமல் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.

மீன்களில் ஒமேகா 3 சத்து அதிகம் உள்ளது ,இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவிகரமாகிறது .மற்ற உணவு பொருட்களில் இருப்பதைவிட மீனில் அறிவுக்கூர்மைக்கு தேவையான சத்துக்கள் நிறைய உள்ளன.



பூசணி விதைகளில் அதிக அளவு ஜிங்க் உள்ளது. இதில் உள்ள மினரல்கள் நியாபக சக்தியை அதிகரிக்க அத்தியாவசியமானவை ஆகும்.

பாதாம் மூளையின் திறனை அதிகரிக்க மிகவும் முக்கியமான ஒரு பொருளாகும். இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்டுகள் அதிகளவில் உள்ளன. இவை மூளையின் திறனை அதிகரிக்கின்றன. இதில் விட்டமின் இ அதிகளவில் உள்ளது.

கீரைகளை உங்களது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது கட்டாயமானதாகும். எனவே வாரத்தில் குறைந்தபட்டமாக 2 முறையாவது உங்களது குழந்தைகளின் உணவில் கீரை இருக்க வேண்டியது அவசியமாகும். இரவு நேரத்தில் கீரைகளை கொடுக்காதீர்கள். அவை செரிமானமாகாது.



வால்நட்ஸ்களில் ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின் இ, ஒமேகா ஃபேட்டி ஆசிட்டுகள், காப்பர், மெக்கனீசு மற்றும் பைபர் போன்ற மூளையின் திறனை ஊக்குவிக்க கூடிய சத்துக்களும் இதில் உள்ளன.

ஆலிவ் ஆயில் குழந்தைகளின் உடல் நலத்திற்கு மிகவும் உள்ளது. இது மூளையின் திறனை மேம்படுத்தக் கூடிய அத்தியாவசிய சத்துக்களை தன் உள்ளடக்கியுள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...