கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயை தவிர்க்க டிப்ஸ்

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயை தவிர்க்க டிப்ஸ்

கர்ப்பக் காலத்தில் அழையா விருந்தாளியாக வந்துசெல்லும் நோய், கர்ப்பக் கால சர்க்கரை நோய்.

கர்ப்பக் காலத்தில் அழையா விருந்தாளியாக வந்துசெல்லும் நோய், கர்ப்பக் கால சர்க்கரை நோய். நாம் சாப்பிடும் உணவு குளுகோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. கணையத்தில் சுரக்கும் இன்சுலின் இந்த குளுகோஸை நம்முடைய உடல் திசுக்கள் பயன்படுத்தும்படி செய்கிறது.

கர்ப்பக் காலத்தில் நஞ்சுக்கொடி, குழந்தையின் வளர்ச்சிக்காகப் பல்வேறு ஹார்மோன்களை சுரக்கிறது. கிட்டத்தட்ட இந்த அத்தனை ஹார்மோன்களும் இன்சுலின் செயல்பாட்டைப் பாதித்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதையே கர்ப்பக் கால சர்க்கரை நோய் என்கிறோம்.

பொதுவாக, கர்ப்பக் காலத்தின் 20-வது வாரத்தில் இது ஏற்படும். பெரும்பாலும் பிரசவத்துக்குப் பிறகு இது மறைந்துவிடும். பெரும்பாலான கர்ப்பக் கால சர்க்கரை நோயை ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்தலாம்.

25 வயதைக் கடந்தவர்கள், பெற்றோருக்கு சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள் ஆரம்பத்திலேயே இதுபற்றி டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். கருத்தரித்த பெண்கள் அனைவரும் ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக்கொள்வது மிகமிக அவசியம். கருத்தரித்த 24-வது வாரத்தில் இருந்து 28-வது வாரத்துக்குள்ளாக ‘இனிஷியல் குளுகோஸ் சேலன்ஜ்’ டெஸ்ட் செய்துகொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் ‘குளுகோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்’ செய்துகொள்ள வேண்டும்.

கர்ப்பக் காலத்தில் சர்க்கரையைத் தவிர்க்க, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உணவில் நார்ச் சத்து அதிகமாகவும், கொழுப்பு மற்றும் கலோரி குறைவாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி, நடைப்பயிற்சியை மருத்துவரின் ஆலோசனையில் பேரில் செய்யலாம். சத்தான உணவுவகைகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். மனஅமைதிக்கு தியானம் செய்யலாம்.

தினமும் குறைந்தது 8 மணி நேரத்திற்கு குறையாமல் தூங்க வேண்டும். பால், பழங்களை அதிகளவில் சாப்பிட வேண்டும்.

அடிக்கடி சர்க்கரையில் அளவை பரிசோதிக்க வேண்டும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...