கோவையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு... தீவிர நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் கொரோனா பரிசோதனை..!

கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மக்களுக்கு கொரோனா பெருந்தொற்றுப் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மக்களுக்கு கொரோனா பெருந்தொற்றுப் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பெருந்தொற்றுப் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் பொது இடங்கள் என பரிசோதனை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் இதுவரை 14 லட்சத்து 15 ஆயிரத்து 261 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய நிர்வாக அதிகாரி, ‘‘கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை 14 லட்சத்து 15 ஆயிரத்து 161 பேருக்கு பரிசோதனை செய்து உள்ளோம். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக தினமும் 10 ஆயிரத்து 470 பேர் வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது'' என்று தெரிவித்தார்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...