கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் குழந்தைகள் தின கொண்டாட்டம் - குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி உற்சாகம்

கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேரு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், ராஜஸ்தான் எம்.எல்.ஏ மதன் பிரஜாபத் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், இனிப்புகளை வழங்கினார்.



கோவை: மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.



இதில் ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர் மதன் பிரஜாபத் கலந்து கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களையும் இனிப்புகளையும் வழங்கினார்.



மேலும் இந்த நிகழ்வில், ஜவஹர்லால் நேருவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...