கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் குழந்தைகள் தின கொண்டாட்டம் - குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி உற்சாகம்

கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேரு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், ராஜஸ்தான் எம்.எல்.ஏ மதன் பிரஜாபத் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், இனிப்புகளை வழங்கினார்.



கோவை: மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.



இதில் ராஜஸ்தான் மாநில சட்டமன்ற உறுப்பினர் மதன் பிரஜாபத் கலந்து கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்களையும் இனிப்புகளையும் வழங்கினார்.



மேலும் இந்த நிகழ்வில், ஜவஹர்லால் நேருவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...