குப்பையில்லா மாநகராட்சிக்கான சான்றுக்கு விண்ணப்பிக்கும் கோவை - பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்க மாநகராட்சி ஆணையர் அழைப்பு..!

குப்பையில்லா மாநகராட்சிக்கான 3 ஸ்டார் ரேட்டிங்குக்காக கோவை மாநகராட்சி விண்ணப்பிக்க உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை நேரடியாகவோ எழுத்துப் பூர்வமாகவோ மாநகராட்சி ஆணையரிடம் தெரிவிக்க அழைப்பு.



கோவை: கோவை மாநகராட்சி குப்பையில்லா மாநகராட்சிக்கான 3 ஸ்டார் ரேட்டிங்குக்காக விண்ணப்பிக்க உள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை நேரடியாகவோ எழுத்துப் பூர்வமாகவோ மாநகராட்சி ஆணையரிடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய நகாப்புற மற்றும்‌ வீட்டுவசதி அமைச்சகத்தின்‌ தூய்மை பாரத திட்டம்‌ 2.0-வின் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ்‌ ஓவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும்‌ STAR RATING வழங்கப்பட்டு வருகிறது.

இதன்‌ ஒரு பகுதியாக கோவை‌ மாநகராட்சியில்‌ உள்ள 100 வார்டு பகுதிகளில்‌ சேகரிக்கப்படும்‌ திடக்கழிவுகளை, திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி முறையே தரம்‌ பிரித்து கையாளப்பட்டு வருகிறது.

எனவே கோவை மாநகராட்சியினை குப்பையில்லா மாநகராட்சியாக (Garbage Free City) மூன்று நட்சத்திர அங்கீகாரம்‌ (Three Star Rating) என சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்க உள்ளது.

பொதுமக்கள்‌ இதுகுறித்த தங்களின்‌ ஆட்சேபனைகள்‌ மற்றும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால்‌ 15 நாட்களுக்குள்‌ தெரிவிக்கலாம்.

அவ்வாறு தெரிவிக்க விரும்புபவர்கள், கோவை‌ மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ ஆலோசனைகள்‌ மற்றும்‌ ஆட்சேபனையை மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...