குப்பையில்லா மாநகராட்சிக்கான சான்றுக்கு விண்ணப்பிக்கும் கோவை - பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்க மாநகராட்சி ஆணையர் அழைப்பு..!

குப்பையில்லா மாநகராட்சிக்கான 3 ஸ்டார் ரேட்டிங்குக்காக கோவை மாநகராட்சி விண்ணப்பிக்க உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை நேரடியாகவோ எழுத்துப் பூர்வமாகவோ மாநகராட்சி ஆணையரிடம் தெரிவிக்க அழைப்பு.



கோவை: கோவை மாநகராட்சி குப்பையில்லா மாநகராட்சிக்கான 3 ஸ்டார் ரேட்டிங்குக்காக விண்ணப்பிக்க உள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை நேரடியாகவோ எழுத்துப் பூர்வமாகவோ மாநகராட்சி ஆணையரிடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய நகாப்புற மற்றும்‌ வீட்டுவசதி அமைச்சகத்தின்‌ தூய்மை பாரத திட்டம்‌ 2.0-வின் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ்‌ ஓவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும்‌ STAR RATING வழங்கப்பட்டு வருகிறது.

இதன்‌ ஒரு பகுதியாக கோவை‌ மாநகராட்சியில்‌ உள்ள 100 வார்டு பகுதிகளில்‌ சேகரிக்கப்படும்‌ திடக்கழிவுகளை, திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி முறையே தரம்‌ பிரித்து கையாளப்பட்டு வருகிறது.

எனவே கோவை மாநகராட்சியினை குப்பையில்லா மாநகராட்சியாக (Garbage Free City) மூன்று நட்சத்திர அங்கீகாரம்‌ (Three Star Rating) என சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்க உள்ளது.

பொதுமக்கள்‌ இதுகுறித்த தங்களின்‌ ஆட்சேபனைகள்‌ மற்றும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால்‌ 15 நாட்களுக்குள்‌ தெரிவிக்கலாம்.

அவ்வாறு தெரிவிக்க விரும்புபவர்கள், கோவை‌ மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ ஆலோசனைகள்‌ மற்றும்‌ ஆட்சேபனையை மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...