தொண்டு நிறுவனம் மூலம் கோவைக்கு ஒரு நாள் சுற்றுலா வந்த பள்ளி மாணவர்கள் மற்றும் திருநங்கைகள் - நேரில் சென்று வரவேற்ற ஆட்சியர் சமீரன்

சென்னையை சேர்ந்த தொண்டு நிறுவனம் உதவியுடன் விமானம் மூலம் கோவைக்கு வந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் திருநங்கைகளை விமான நிலையத்தில் ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் வரவேற்றனர்.


கோவை: சென்னையில் உள்ள Rain Drops என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சென்னையில் இருந்து அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் திருநங்கைகளை கோயம்புத்தூர் வரை முதல் முறை விமானம் மூலம் பயணம் மேற்கொண்டு ஒரு நாள் கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக அழைத்து சென்றுள்ளனர்.



இந்நிலையில், கோவைக்கு வருகை தந்துள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் திருநங்கைகளை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் கோவை விமான நிலையத்தில் வரவேற்றனர்.



ஒரு நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள அரசு பள்ளி மாணவ மாணவியர் மற்றும் திருநங்கைகள் கோவை மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியகம், பூங்கா ஆகியவற்றை பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது.



இந்த வரவேற்பு நிகழ்வின் போது கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பூமா மற்றும் NGO நிறுவன பிரதிநிதிகள் உடன் இருந்தனர். இந்த நிகழ்வில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கியும் மாணவர்களுடன் வருகை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...